சனிக்கிழமை, ஏப்ரல் 27
Shadow

தனி ஹெலிகாபடரில் பறந்து வந்து ஐய்யப்பனை தரிசித்த பாலிவுட் ஹீரோ!

தனி ஹெலிகாபடரில் பறந்து வந்து ஐய்யப்பனை தரிசித்த பாலிவுட் ஹீரோ!

பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் சபரிமலை வந்தார். தனி ஹெலிகாப்டர் மூலம் கொச்சி வந்த அவர், 11.30 மணிக்கு சபரிமலை ஐயப்பனை தரிசிக்க மலைப்பயணம் மேற்கொண்டார்.

பின்னர் தந்திரி மற்றும் மேல்சாந்தியை சந்தித்து ஆசி பெற்றார். மாளிகைபுரம் நடையில் தரிசனம் மற்றும் பிரசாதங்களை முடித்துக் கொண்டு திரும்பினார். அஜய் தேவ்கன் தற்போது 4வது முறையான சபரிமலை யாத்திரை மேற்கொண்டுள்ளார்.

ராஜமௌலி இயக்கிய ஆர்ஆர்ஆர் மற்றும் சஞ்சய் லீலா பன்சாலியின் கங்குபாய் கத்யாவதி ஆகிய படங்கள் அஜய் நடிப்பில் வெளியாக உள்ளன.

பொங்கல் கொண்டாட்டமாக ரிலீஸ் ஆகியிருக்க வேண்டிய படங்கள் கொரோனா பரவல் காரணமாக தள்ளிப் போனது.

அமிதாப் பச்சனை வைத்து ரன்வே 34 படத்தையும் அஜய் தேவ்கன் இயக்கி வருகிறார். இவர் இயக்கும் மூன்றாவது படம் இதுவாகும்.

163 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன