புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ரூ 2.87 கோடி ரொக்கம், 6.63 கிலோ தங்கம் பறிமுதல்!

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன். இவர் கடந்த அதிமுக ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சாராக செயல்பட்டார்.
இதற்கிடையில், கே.பி. அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
கே.பி. அன்பழகனின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய 58 இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவித்ததாக எழுந்த புகாரில் முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை, தருமபுரி உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலும், தெலுங்கானாவிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. கே.பி.அன்பழகனின் உறவினர்கள், ஆதரவாளர்கள் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவித்ததாக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வருமானத்தை விட கூடுதலாக 11.32 கோடி ரூபாய் சொத்துக்குவித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசி மோகன், சந்திரமோகன் மற்றும் மருமகள் வைஷ்ணவி ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கே.பி. அன்பழகன் 2016 முதல் 2021 வரை உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கே.பி. அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்று அதிரடி சோதனை நடத்தினர். கே.பி. அன்பழகனின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய தர்மபுரி- 53, சேலம் – 1 , சென்னை 3 , உள்பட  58 இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தினர்.
இந்த சோதனை தற்போது நிறைவடைந்து இருப்பதாக லன்ச்ஜ ஒழிப்புதுறை தெரிவித்து உள்ளது.
இந்த சோதனையில்  6.637 கிலோ தங்கம், 13.85 கிலோ  வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.  கண்க்கில் காட்டப்படாத ரூ.2.65 கோடி பறிமுதல்ச் எய்யப்பட்டு உள்ளது. மேலும் வங்கி லாக்கர் சாவிகள் மற்றும் வழக்கிற்கு தொடர்புடைய ஆவணங்கள் கைபற்றப்பட்டு உள்ளதாக லஞ்ச ஒழிப்புதுறை தெரிவித்து உள்ளது.
469 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன