ஞாயிற்றுக்கிழமை, மே 12
Shadow

வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட நடிகை!

 

 

பாலிவுட் திரைப்பட உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியங்கா சோப்ரா, தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
உலகின் 100 சக்திவாய்ந்த பெண்களில் ஒருவராக நடிகை பிரியங்கா சோப்ராவையும் ஃபோர்ப்ஸ் இதழ் தேர்ந்தெடுத்திருந்தது.
கடந்த 2018 ஆம் ஆண்டு பாடகர் நிக் ஜோனாசை, பிரியங்கா சோப்ரா திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில், நடிகை பிரியங்கா சோப்ரா வாடகை தாய் மூலம் முதல் குழந்தைக்கு தாய் ஆகி உள்ளார்.
இந்த தகவலை அவரது கணவர் நிக் ஜோனஸ் தமது  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் நிக்கை டேக் செய்து ஒரு குறிப்பைப் பகிர்ந்துள்ள பிரியங்கா, “நாங்கள் வாடகைத் தாய் மூலம் ஒரு குழந்தையை வரவேற்றோம் என்பதை உறுதிப்படுத்துவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.
இந்த சிறப்பு நேரத்தில் நாங்கள் எங்கள் குடும்பம் குறித்து கவனம் செலுத்துவதால் தனியுரிமையை விரும்புகிறோம், மிக்க நன்றி.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்
என்ன குழந்தை பிறந்துள்ளது என்பது குறித்து பிரியங்கா- நிக் ஜோன்ஸ் தம்பதியினர் தெரிவிக்கவில்லை. அதேவேளையில், அமெரிக்க ஊடகமாக TMZ, இந்த தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவித்துள்ளது. தெற்கு கலிஃபோர்னியாவில் உள்ள மருத்துவமனையில் சனிக்கிழமையன்று குழந்தை பிறந்துள்ளதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது.
383 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன