
குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் அறிமுகமாகி தற்போது கதாநாயகனாக உயர்ந்திருக்கிறார் நடிகர் சிம்பு,
இவரின் திறமையை பாராட்டி சமீபத்தில் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
இடைப்பட்ட காலத்தில் இவரது படங்களுக்கு போதுமான வரவேற்பு இருந்த நிலையில், இவரை மீண்டும் நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்த்தும் விதமாக ‘மாநாடு’ படம் அமைந்தது.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இவருக்கு பல படங்கள் வரிசைகட்டி நிற்கிறது, சில படங்களில் இவர் நடித்துக்கொண்டும் இருக்கிறார். இந்நிலையில் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இப்படத்தை AGS என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
கடந்த 2020 ஆம் ஆண்டு அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங் மற்றும் வாணிவாணி இயக்கத்தில் தமிழில் வெளியான ‘ஓ மை கடவுளே’ ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.
இந்த படம் தற்போது தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ரீமேக் ஆகிறது.
தற்போது இவர்கள் கூட்டணியில் உருவாகப்போகும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் சிம்பு ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ மற்றும் ‘அச்சம் என்பது மடமையடா’ படங்களை தொடர்ந்து மீண்டும் கௌதம் மேனன் இயக்கும் ‘வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் கவுதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் நடிக்கும் பத்து தல படத்தில் நடிகர் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
மேலும் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தின் இயக்குனர் கோகுல் இயக்கத்தில் சிம்பு ‘கொரோனா குமார்’ என்கிற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

