நடிகர் தனுஷுக்கு இது போறாத காலம் போல… சமீபத்தில் தனது திருமண வாழ்க்கை 18 ஆண்டுகளோடு முடிகிறது என சொல்லி மனைவி ஐஸ்வர்யாவை பிரிகிறேன் என குறிப்பிட்டிருந்தார் தனுஷ்.
இப்போது அவர் நடிப்பில் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் உருவாகி வரும் வாத்தி படத்திலிருந்து ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் விலகியுள்ளார்.
தனுஷ் நடிப்பில் உருவான ஜகமே தந்திரம், அத்ராங்கி ரே (கலாட்டா கல்யாணம்), படங்களைத் தொடர்ந்து மாறன் படமும் ஓடிடியில் வெளியாகவுள்ளது.
இதேபோன்று ஹாலிவுட்டில் தனுஷ் நடித்த கிரே மேன் படமும் பிரபல ஓடிடி தளத்தில்தான் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனவரி 26-ம்தேதி மாறன் படத்திலிருந்து முதல் பாடலாக, பொல்லாத உலகம் என்ற பாடல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தனுஷ் தற்போது தமிழில் வாத்தி, தெலுங்கில் சார் என 2 மொழிகளில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தை தெலுங்கில் பிரபல இயக்குனராக இருக்கும் வெங்கி அட்லுரி இயக்கி வருகிறார்.
இதில் தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்த நிலையில், படத்திலிருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.
இதற்கான காரணம் குறித்த விபரங்கள் வெளியாகவில்லை.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘துரதிருஷ்டவசமாக நான் வாத்தி படத்திலிருந்து வெளியேறுகிறேன். விரைவில் இதே கூட்டணியுடன் இணைந்து படத்தில் பணியாற்றுவேன் என்று நம்புகிறேன்’ என கூறியுள்ளார்.
It is unfortunate that I couldn’t be a part of @dhanushkraja’s #vaathi #SIRmovie Hoping to work soon with @Fortune4Cinemas @SitharaEnts @vamsi84 #venkyatluri 😊. #covid pic.twitter.com/fjRq9GYsiJ
— Dinesh krishnan DP (@dineshkrishnanb) January 25, 2022