
அல்லு அர்ஜூனின் புஷ்பா படத்தால் கவரப்பட்டு திரைப்பட பாணியிலேயே செம்மரங்களை கடத்தியவர் மகாராஷ்டிராவில் சிக்கியிருக்கிறார்.
கைதான கடத்தல் நபர் லாரி ஓட்டுநர் யாசீன் இனாயதுல்லா ஆவர்.
அண்மையில் புஷ்பா படத்தை பார்த்த இந்த நபர் தனது லாரியிலேயே செம்மரங்களை கடத்தியிருக்கிறார்.
கர்நாடக ஆந்திர எல்லையில் இருந்து செம்மரங்களை கடத்திக் கொண்டு மகாராஷ்டிராவை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்திருக்கிறார் யாசீன்.
அப்போது சங்லி மாவட்டத்தின் மீரஜ் நகர் காந்தி செளக் பகுதியை கடக்கும் போதுதான் மகாராஷ்டிரா போலிஸாரால் வசமாக பிடிபட்டிருக்கிறார்.
அப்போது அவரது லாரியில் இருந்து 2.45 கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்துள்ளனர்.
317 Views
