சனிக்கிழமை, ஏப்ரல் 20
Shadow

புதிதாக 2,876 பேருக்கு தொற்று- கொரோனா தினசரி பாதிப்பு சற்று அதிகரிப்பு!

 

இந்தியாவில் கொரோனாவால் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,876 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சமீப நாட்களாக தினசரி பாதிப்பு தொடர்ந்து குறைந்து கடந்த 13-ந் தேதி 3,116 ஆக இருந்தது. மறுநாள் 2,500 ஆக குறைந்த நிலையில், நேற்று 2,568 ஆக உயர்ந்தது.

இந்நிலையில் இன்று பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 4 கோடியே 29 லட்சத்து 98 ஆயிரத்து 938 ஆக உயர்ந்தது.

கேரளாவில் கடந்த 2 நாட்களாக தினசரி பாதிப்பு ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்தது. இந்நிலையில் அங்கு புதிய பாதிப்பு 1,193 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பால் மேலும் 98 பேர் இறந்துள்ளனர். இதில் கேரளாவில் விடுபட்ட மரணங்கள் உள்பட 72 பேர் அடங்குவர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 5,16,072 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 3,884 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 24 லட்சத்து 50 ஆயிரத்து 55 ஆக உயர்ந்தள்ளது.

தற்போது 32,811 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நேற்று முன்தினத்தை விட 1,106 குறைவு ஆகும்.

நாடு முழுவதும் இதுவரை 180 கோடியே 60 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதில் நேற்று 18,92,143 டோஸ்கள் அடங்கும்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி, நேற்று 7,52,818 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்த பரிசோதனை எண்ணிக்கை 78.05 கோடியாக உயர்ந்துள்ளது.
151 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன