வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

நாட்டிலேயே முதன்முறையாக மும்பையில் ஏ.சி. மின்சார ரெயில் சேவை தொடங்கியது

நாட்டிலேயே முதன்முறையாக மும்பையில் ஏ.சி. மின்சார ரெயில் மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. மும்பைவாசிகளுக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பரிசாக ஏ.சி. மின்சார ரெயில் கிறிஸ்துமஸ் தினமான இன்று முதல் (திங்கட்கிழமை) பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டது. பயணிகளின் வசதிக்காக நாட்டிலேயே முதன்முறையாக மும்பையில் ஏ.சி. புறநகர் மின்சார ரெயில்களை இயக்க கடந்த 2002–ம் ஆண்டு திட்டமிடப்பட்டது.
முன்னதாக ரெயில் சேவையை தொடங்கி வைத்து மந்திரி வினோத் தாவ்டே கூறியதாவது:– மும்பை, சென்னை, கொல்கத்தா போன்ற பெரு நகரங்களில் ஏ.சி. மின்சார ரெயில் கட்டாயம் தேவை. இந்த நகரங்களில் வெப்பம் மற்றும் தூசிக்கிடையே அலுவலகம் செல்லும் மக்கள் போராடி வருகின்றனர். ஏ.சி. ரெயிலில் அவர்கள் சவுகரியமாக பயணம் செய்ய முடியும். மெட்ரோ, ஏ.சி. ரெயில் சேவைகளால் மேலும் பலர் பொது போக்குவரத்து வசதியினை பயன்படுத்த முன்வருவார்கள் என நம்புகிறேன். ஏ.சி. மின்சார ரெயில் மூலம் சாலைகளில் செல்லும் கார்களின் எண்ணிக்கை குறைந்து போக்குவரத்து நெரிசல் குறையும். இவ்வாறு அவர் கூறினார்.
306 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன