சனிக்கிழமை, ஏப்ரல் 27
Shadow

எந்த படத்தையும் நான் இப்படி பார்த்ததில்லை – தயாரிப்பாளர் எஸ்.தாணு !

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் ‘நானே வருவேன்’.

இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார்.

அவருக்கு ஜோடியாக நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, பிரபு, எல்லி அவுரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகை உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

வி கிரியேசன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

‘நானே வருவேன்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு ‘நானே வருவேன்’ திரைப்படம் குறித்து அளித்துள்ள பேட்டி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

அதில், ‘நானே வருவேன்’ திரைப்படம் முதல் நாள் வசூல் அள்ளி விடும்.

இரண்டாவது நாள் ‘பொன்னியின் செல்வன்’ வெளியாகும் போது வசூல் சிறிது குறையும்.

ஆனால் மூன்றாவது நாள் இரண்டும் ஒரே மாதிரியான நிலையை எட்டிவிடும்.

இரண்டு படங்களும் மிகப்பெரிய மைல் ஸ்டோனாக இருக்கும்.

நான் இதுவரை ‘நானே வருவேன்’ திரைப்படத்தை பதினைந்து முறை பார்த்திருக்கிறேன். எந்த படத்தையும் நான் இப்படி பார்த்தது இல்லை. அப்போது அந்த கதாபாத்திரம் என்னை இழுக்கிறது என்று அர்த்தம்” என்று கூறினார்.

83 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன