ஞாயிற்றுக்கிழமை, மே 19
Shadow

என்னடா இது “வந்தே பாரத்”துக்கு வந்த சோதனை மாடு மீது மோதி மீண்டும் 3ம் முறையாக சேதமடைந்த வந்தே பாரத் ரெயில்

 

என்னடா இது “வந்தே பாரத்”துக்கு வந்த சோதனை மாடு மீது மோதி மீண்டும் 3ம் முறையாக சேதமடைந்த வந்தே பாரத் ரெயில்!

மாடு மீது மோதி மீண்டும் சேதமடைந்த வந்தே பாரத் ரெயில்

குஜராத் மாநிலம் காந்திநகர்- மும்பை வழித்தடத்தில் சென்ற வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இன்று காலை 8 மணியளவில் மாடு மீது மோதியது.

அதுல் ரெயில் நிலையம் அருகே ஏற்பட்ட இந்த விபத்தில் ரெயிலின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது.

மேலும் இந்த விபத்து கடந்த ஒரு மாதத்தில் இது மூன்றாவது முறையாகும். இந்த விபத்துக்கு பிறகு, அதிவேக ரெயில் சேவை சுமார் 15 நிமிடங்களுக்கு நிறுத்தப்பட்டது.

ஏற்கனவே, இந்த மாத தொடக்கத்தில், குஜராத்தில் உள்ள ஆனந்த் ஸ்டேஷன் அருகே அதிவேக ரெயிலான வந்தே பாரத் நான்கு எருமை மாடுகள் மீது மோதியது. பிறகு இரண்டு நாட்களில் மீண்டும் மற்றொரு மாடு மீது மோதியது.

இதுகுறித்து ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், “கால்நடைகளுடன் இதுபோன்ற மோதலை தவிர்க்க முடியாது. இருப்பினும், ரயிலை வடிவமைக்கும் போது இது மனதில் வைக்கப்படும்” என்றும் கூறினார்.

76 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன