தமிழக முதல்வர் கே.பழனிசாமி, தன் கைப்பட எழுதிய புத்தாண்டு, பொங்கல் வாழ்த்து அடங்கிய அட்டை பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
தமிழக முதல்வராக கடந்த பிப்ரவரி 18-ம் தேதி கே.பழனிசாமி பதவியேற்றார். அவர் முதல்வராக பதவியேற்று தற்போது 10 மாதங்கள் கடந்துள்ளன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பின்பற்றி பொதுமக்களுக்கான பொங்கல் சிறப்பு பரிசை அவர் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், புத்தாண்டு, பொங்கலை முன்னிட்டு நேற்று தனது கைப்பட ஆங்கிலத்திலும், தமிழிலும், ‘ தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது இதயங்கனிந்த ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்’ என்ற வாழ்த்து செய்தியை முதல்வர் பழனிசாமி எழுதியுள்ளார்.
இந்த வாழ்த்துச் செய்தி, எம்பிக்கள், எம்எல்ஏக்கள், ஐஏஎஸ் அதிகாரிகள், பத்திரிகை அதிபர்கள், பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.