ஞாயிற்றுக்கிழமை, மே 24
Shadow

2ஜி வழக்கில் உண்மை வென்றது: ஆ.ராசாவுக்கு மன்மோகன் சிங் கடிதம்

2ஜி வழக்கில் உண்மை வென்றது: ஆ.ராசாவுக்கு மன்மோகன் சிங் கடிதம்

2ஜி ஊழல் புகார்கள் தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்குகளை விசாரித்த டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் கடந்த 21ம் தேதி தீர்ப்பு வழங்கியது.
அதில், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கனிமொழி, ராசா உள்ளிட்ட 14 பேரையும் விடுவித்து தீர்ப்பு வழங்கியது. மேலும் அந்த வழக்கிலிருந்து 3 தனியார் நிறுவனங்களும் விடுவிக்கப்பட்டன.


இதையடுத்து, கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை தி.மு.க.வினர் கொண்டாடி மகிழ்ந்தனர்.இந்நிலையில், 2ஜி வழக்கில் உண்மை வென்றது என ஆ.ராசாவுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதியுள்ளார்.
அவர் எழுதியுள்ள கடிதத்தில், 2ஜி வழக்கில் உண்மை வென்றிருப்பது மகிழ்ச்சியை தருகிறது. 2ஜி வழக்கில் இருந்து நீங்கள் விடுதலையானது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது..ராசாவும் அவரது குடும்பத்தினரும் 2ஜி வழக்கு காலத்தில் பெரும் துயரத்தை சந்தித்திருப்பார்கள். ராசா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

381 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன