திங்கட்கிழமை, மே 25
Shadow

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்

 

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரும் 16ம் தேதி தொடங்கி வைக்கிறார்

பொங்கல் திருநாளையொட்டி மதுரை மாவட்டம், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப் பிரசித்தி பெற்றவை.


அவனியாபுரத்தில் நாளையும் (14-ந்தேதி), பாலமேட்டில் 15-ந் தேதியும், அலங்காநல்லூரில் 16-ந் தேதியும் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.
அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தொடங்கி வைக்கிறார்கள். இதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 14-ந்தேதி சேலத்தில் பொங்கல் விழாவை கொண்டாடி விட்டு அங்கிருந்து 15-ந் தேதி மாலை காரில் மதுரை வருகிறார்.


மதுரை அரசு சுற்றுலா விடுதியில் தங்கும் எடப்பாடி பழனிசாமி 16-ந்தேதி காலை அலங்காநல்லூர் புறப்பட்டுச் செல்கிறார். காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்குகிறார்.


இதையொட்டி அலங்காநல்லூர் வாடிவாசலில் இருந்து ஊர் எல்லை வரை 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அலங்காநல்லூருக்கு முதல்வர் வருவதையொட்டி சாலைகள் சீரமைக்கும் பணியும் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்த பணிகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மாவட்ட கலெக்டர் ராவ் இன்று ஆய்வு செய்தனர்.

315 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன