சி.பி.எஸ்.சி தேர்வில் 97.4 சதவிகித மதிப்பெண்கள் பெற்று பாதி பார்வை குறைபாடு கொண்ட மாணவி சாதனை
பீகார் மாநிலத்தை சேர்ந்த, லாவண்யா ஜா எனும் பாதி பார்வை குறைபாடு உடைய மாணவி தான் விரும்பிய பாடத்திட்டம் பீகாரில் இல்லாத காரணத்தினால் தனது பெற்றோரை விட்டுவிட்டு டெல்லியில் உள்ள விடுதியில் தங்கி கல்வி பயின்றார்.
12ம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு முடிவுகளுக்காக காத்திருந்த நிலையில் சி.பி.எஸ்.சி தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.
இதில், மாற்றுத்திறனாளி மாணவர்களிடையே லாவண்யா ஜா 97.4 சதவிகித மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
தேர்வு முடிவுகளுக்கு பின்னர் லாவண்யா ஜா பேசியதாவது :-
எனக்கு உள்ள பார்வை குறைபாடு எனது கல்வியை பாதிக்க நான் அனுமதிக்கவில்லை. அதை ஒரு தடையாகவும் நான் பொருட்படுத்தவில்லை. தினமும் தேர்வுக்கு 3 மணி நேரம் படித்து எண்னை தயார் செய்துகொண்டேன்.
தேர்வு எழுதும் போது கூடுதல் நேரம் அனுமதி வாங்கி எழுதினேன். அடுத்ததாக கல்லூரி படிப்...