செவ்வாய்க்கிழமை, மே 14
Shadow

செய்திகள்

கொரோனா அதிகரிப்பு எதிரொலி- இந்திய பயணிகளுக்கு நியூசிலாந்து தடை!

கொரோனா அதிகரிப்பு எதிரொலி- இந்திய பயணிகளுக்கு நியூசிலாந்து தடை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கொரோனா அதிகரிப்பு எதிரொலி- இந்திய பயணிகளுக்கு நியூசிலாந்து தடை! இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் இந்திய பயணிகளுக்கு நியூசிலாந்து வர அனுமதியில்லை என்று அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா அறிவித்துள்ளார். இந்தியாவில் இருந்து வரும் பலருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறி நியூசிலாந்து அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ஏப்.11 முதல் 28 வரை இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் நியூசிலாந்தில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது....
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலாவுக்கு சிறை தண்டனை வழங்கிய நீதிபதி குன்ஹா ஓய்வு!

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலாவுக்கு சிறை தண்டனை வழங்கிய நீதிபதி குன்ஹா ஓய்வு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலாவுக்கு சிறை தண்டனை வழங்கிய நீதிபதி குன்ஹா ஓய்வு. தமிழக முதல்வராக 1991-ஆம் ஆண்டு முதல் 1996-ஆம் ஆண்டு வரை ஜெயலலிதா பதவி வகித்த போது வருமானத்துக்கு அதிகமான ரூ 66 கோடிக்கு சொத்து சேர்த்ததாக திமுக தொடர்ந்த வழக்கு  பெங்களூர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரிக்க தனிநீபதியாக நீதிபதி குன்ஹா நியமிக்கப்பட்டார். அவர் ஜெயலலிதா வழக்கை  2003ம் ஆண்டு முதல்  விசாரித்து  வந்தார்.  18 ஆண்டுகால விசாரணைக்கு பிறகு,  2014-ஆம் ஆண்டு அதிரடியாக தீர்ப்பு வழங்கினார்.  சொத்துக்குவிப்பு வழக்கில், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்றும்  4 பேருக்கும் 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். இந்த தீர்ப்பு உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பதவியில் உள்ள ஒரு முதல்வர் சிறைக்கு சென்றது இதுவே முதல் ம...
ஹீரோவானார் நகைச்சுவை நடிகர் சதீஷ்!

ஹீரோவானார் நகைச்சுவை நடிகர் சதீஷ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ஹீரோவானார் நகைச்சுவை நடிகர் சதீஷ்! தமிழ்த் திரையுலகில் வடிவேலு, சந்தானம், யோகிபாபு, சூரி உள்பட பல்வேறு பிரபலங்கள் நகைச்சுவை நடிகர்களாக அறிமுகமாகி பின்னர் ஹீரோவாக உயர்ந்துள்ளனர். தற்போது நடிகர் சதீஷும் அந்த வரிசையில் சேர்ந்துள்ளார். இவர் தற்போது, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்தை கிஷோர் ராஜ்குமார் இயக்கவுள்ளார். இது அவர் இயக்கும் முதல் படமாகும். பெயரிடப்படாத இப்படத்தின் பூஜை, இன்று நடைபெற்றது. இதன் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் சென்னையிலேயே நடைபெற உள்ளது. இப்படத்தில் சதீஷுக்கு ஜோடியாக ‘குக் வித் கோமாளி’ பிரபலம் பவித்ரா லட்சுமி நடிக்கவுள்ளார். பிரவீன் ஒளிப்பதிவு செய்ய உள்ள இப்படத்திற்கு, அஜீஷ் அசோக் இசையமைக்க உள்ளனர். இந்தப் படத்தின் பூஜையில் நடிகர் சிவகார்த்திகேயன், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்....
6 நாட்களுக்கு பிறகு பிளஸ்-2 மாணவர்களுக்கு மீண்டும் வகுப்பு நாளை தொடக்கம்!

6 நாட்களுக்கு பிறகு பிளஸ்-2 மாணவர்களுக்கு மீண்டும் வகுப்பு நாளை தொடக்கம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
6 நாட்களுக்கு பிறகு பிளஸ்-2 மாணவர்களுக்கு மீண்டும் வகுப்பு நாளை தொடக்கம்!! கொரோனா தொற்று பரவல் காரணமாக பிளஸ்-2 மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்பு நடைபெற்று வருகிறது. மே மாதம் 3-ந் தேதி பொதுத்தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பதால் அதற்குள்ளாக பாடத்திட்டங்கள் நடத்தி முடித்து திருப்புதல் தேர்வுகளை நடத்துவதில் பள்ளிகள் தீவிரமாக உள்ளன. இந்த நிலையில் பள்ளி மாணவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவதால் பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பிளஸ்-2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு அடுத்த வாரம் முதல் தொடங்குகிறது. அதனை தொடர்ந்து பொதுத் தேர்வினை நடத்துவதற்கான ஏற்பாடுகளும் நடைபெறுகின்றன. இதற்கிடையில் சட்டசபை தேர்தல் மற்றும் புனித வெள்ளிக்காக கடந்த வாரம் 3-ந் தேதி முதல் பிளஸ்-2 மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. வாக்குச்சாவடிகளாக செயல்படும் பள்ளி...
கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் கமல்ஹாசன் திடீர் ஆய்வு!

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் கமல்ஹாசன் திடீர் ஆய்வு!

HOME SLIDER, politics, செய்திகள், நடிகர்கள்
கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் கமல்ஹாசன் திடீர் ஆய்வு! கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் இவரை எதிர்த்து பாரதிய ஜனதா தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், காங்கிரஸ் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் ஆகியோர் போட்டியிடுவதால் கடும் போட்டி நிலவியது. நேற்று காலை சென்னையில் தனது வாக்கை பதிவு செய்த கமல்ஹாசன், உடனடியாக அங்கிருந்து தனி விமானத்தில் புறப்பட்டு கோவை வந்தார். கோவையில் தான் போட்டியிடும் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டார். வாக்குப்பதிவு விவரம், எதாவது பிரச்சனைகள் உண்டா? என தேர்தல் அலுவலர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில் தோல்வி பயத்தில் உள்ளவர்கள் டோக்கன் வழங்கி பணப்பட்டுவாடா செய்வதாகவும், இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என தெரிவித்தார். தொட...
75 இடங்களில் ஓட்டு எண்ணிக்கை- மின்னணு எந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு!

75 இடங்களில் ஓட்டு எண்ணிக்கை- மின்னணு எந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
75 இடங்களில் ஓட்டு எண்ணிக்கை- மின்னணு எந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு! தமிழக சட்டசபை தேர்தல் நேற்று அமைதியான முறையில் நடந்து முடிந்தது. 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்புடன் ஓட்டுப்பதிவு நடைபெற்றது. 72.78 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் இது 2 சதவீதம் குறைவாகும். வழக்கமாக தேர்தல்களில் மாலை 5 மணியுடன் ஓட்டுப்பதிவு முடிவடைந்து விடும். ஆனால் இந்த முறை கொரோனா பரவல் காரணமாக இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிவடைந்ததும் மொத்த வாக்குகள், பதிவான வாக்குகள் கணக்கிடப்பட்டன. அந்த பணி முடிந்ததும் கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டன. பின்னர் பலத்த பாதுகாப்பு டன் தேர்தல் ஆணையத்தின் வாகனத்தில் ஏற்றி ஓட்டு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. 234 தொகுதிகளிலும் பதிவான வாக...
‘நடிகர் ஜெய்’க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ‘சிம்பு’!

‘நடிகர் ஜெய்’க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ‘சிம்பு’!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
‘நடிகர் ஜெய்’க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ‘சிம்பு’! விஜய் நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான பகவதி படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார் ஜெய். இதையடுத்து சென்னை 28, சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும், கலகலப்பு 2 என பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து தமிழ் திரையுலகில் தனக்கென ஓர் இடத்தை பிடித்தார். இதுவரை 25 படங்களில் நடித்துள்ளார். இவர் கைவசம் பிரேக்கிங் நியூஸ், எண்ணித் துணிக, பார்ட்டி போன்ற படங்கள் உள்ளன. நடிகர் ஜெய் தற்போது இசையமைப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார். சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் சிவ சிவா படத்திற்கு ஜெய் தான் இசையமைத்துள்ளார். நடிகர் ஜெய் நேற்று பிறந்தநாள் கொண்டாடினார். இந்நிலையில், பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது நடிகர் சிம்பு திடீரென கலந்துகொண்டு சர்ப்ரைஸ் கொடுத்ததாக, நடிகர் ஜெய் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது சிம்...
கொரோனா தொற்று பரவல் காரணமாக மூடப்பட்ட மும்பை கடற்கரைகள்!

கொரோனா தொற்று பரவல் காரணமாக மூடப்பட்ட மும்பை கடற்கரைகள்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கொரோனா தொற்று பரவல் காரணமாக மூடப்பட்ட மும்பை கடற்கரைகள்! மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக அம்மாநில அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இரவு ஊரடங்கு, வார இறுதி நாட்களில் ஊரங்கு, பகல் நேரத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், மும்பை மாகராட்சி கமிஷனர் இக்பால் சகால் நேற்று  உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அதில், மும்பையில் உள்ள அனைத்து கடற்கரைகளையும் வரும் 30-ம் தேதி வரை மூடவேண்டும் என உத்தரவிட்டார். இந்த உத்தரவை மாநகராட்சி உதவி கமிஷனர்கள் அமல்படுத்த வேண்டும் எனவும் கூறியிருந்தார். அதன்படி, மும்பையில் உள்ள அனைத்து கடற்கரைகளும் நேற்று மூடப்பட்டன. போலீசார் அங்கு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதனால் கடற்கரைகள் பொதுமக்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. கடற்ரைக்கு வந்தவர்களை போலீசார் திருப்பி அனுப்பினர் ...
சைக்கிளில் வந்த விஜய்!

சைக்கிளில் வந்த விஜய்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
சைக்கிளில் வந்த விஜய்! தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. அரசியல் மற்றும் திரைப்பிரபலங்கள் வாக்குச்சாவடிகளுக்கு வந்து தங்களது வாக்கை செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். நடிகர்களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், சூர்யா, சிவகுமார், கார்த்தி ஆகியோர் வாக்குகளை செலுத்தினர். இதையடுத்து நடிகர் விஜய் நீலாங்கரையிலுள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க சைக்கிளில் வந்தார். விஜய் சைக்கிளில் வந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அவரைப் பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் உற்சாக குரல் எழுப்பினர். விஜய் வாக்களிக்க வந்து சென்ற வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பேசுபொருளாக மாறியிருக்கிறது. பெட்ரோல் விலை உயர்வை இப்படி குறியீடாக சொல்லியிருக்கிறார் என்று சமூகவலைத்தளத்தில் பேசப்பட்டது. இதனால், சைக்கிளில் வந்த நடிகர் விஜய் ஸ்கூட்டரில் திரும்பிச் சென்றார்....
தமிழகத்தில் 71.79 சதவீத வாக்குப்பதிவு: 5 மணிக்குப்பிறகு 8.19 சதவீதம் பதிவு!

தமிழகத்தில் 71.79 சதவீத வாக்குப்பதிவு: 5 மணிக்குப்பிறகு 8.19 சதவீதம் பதிவு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் 71.79 சதவீத வாக்குப்பதிவு: 5 மணிக்குப்பிறகு 8.19 சதவீதம் பதிவு! தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. காலை ஏழு மணி முதல் இரவு ஏழு மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழகம் முழுவதுமாக 71.79 சதவீத வாக்குகள் பதிவானதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அறிவித்தார். முன்னதாக, காலை 9 மணி நிலவரப்படி 13.80% வாக்குகள் பதிவாகியிருந்தது. 11 நிலவரப்படி 26.29% வாக்குகளும், மதியம் 1 மணி நிலவரப்படி 39.61% சதவீதமும், மதியம் 3 மணி நிலவரப்படி 53.35% சதவீதமும், மாலை 5 மணி நிலவரப்படி 63.60 சதவீதமும் பதிவாகின. அதன்பின் மொத்தமாக 71.79 சதவீத வாக்குகள் பதிவானது. ஐந்து மணிக்குப்பிறகு 8.19 சதவீத வாக்குகள் பதிவாகின. ...