திங்கட்கிழமை, ஏப்ரல் 29
Shadow

சினி நிகழ்வுகள்

நடிகர் விஜய்யின் ‘பீஸ்ட்’ பட தலைப்புக்கு எதிர்ப்பு!

நடிகர் விஜய்யின் ‘பீஸ்ட்’ பட தலைப்புக்கு எதிர்ப்பு!

CINI NEWS, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நடிகர் விஜய்யின் ‘பீஸ்ட்’ பட தலைப்புக்கு எதிர்ப்பு! நடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்குகிறார். இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி இப்படத்திற்கு பீஸ்ட் என பெயரிடப்பட்டு உள்ளது. இந்நிலையில், நடிகர் விஜய்யின் பீஸ்ட் பட தலைப்புக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு இது தொடர்பாக பதிவு ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், நடிகர் விஜய் நடிக்கும் படங்கள் தமிழில் தான் எடுக்கப்படுகின்றன என்றும், ஆனால் தமது தாய்மொழியான தமிழ் மொழியை மதிக்காமல் தொடர்ந்து ஆங்கில பெயர்களையே வைப்பதன் மர்மம் என்னவோ என வன்னி அரசு கேள்வி எழுப்பி உள்ளார். மாஸ்டர், பிகில் படங்களை தொடர்ந்து பீஸ்ட் என பெயர் சூட்டி தாய்மொழியை புறக்கணித்து அவமானப்படுத்துவது சரியா? என நடிகர் விஜய்க்கு, வன்னி...
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமின் மனு- அடையாறு போலீசாருக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்!

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமின் மனு- அடையாறு போலீசாருக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமின் மனு- அடையாறு போலீசாருக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்! திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாகவும், கட்டாயப்படுத்தி பல முறை கருகலைப்பு செய்ததாகவும் திரைப்பட நடிகை சாந்தினி அளித்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட்டார். போலீசார் கைது செய்வதற்கு முன்பு மணிகண்டன் முன் ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட்டு கடந்த 16-ந்தேதி தள்ளுபடி செய்தது. இதையடுத்து பெங்களூரு அருகே பதுங்கியிருந்த முன்னாள் அமைச்சரை கடந்த 20-ந்தேதி போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய மணிகண்டனை வரும் ஜூலை 2-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் ஜாமின் கோரி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று நீதிபதி செல்வகுமார...
இன்னும் முடியல… இனிமேதான் ஆரம்பம்… தளபதி 65 படத்தின் அடுத்த அறிவிப்பு!

இன்னும் முடியல… இனிமேதான் ஆரம்பம்… தளபதி 65 படத்தின் அடுத்த அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Photos, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இன்னும் முடியல... இனிமேதான் ஆரம்பம்... தளபதி 65 படத்தின் அடுத்த அறிவிப்பு! நடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்குகிறார். இப்படத்தை ‘தளபதி 65’ என அழைத்து வந்தனர். இந்நிலையில் இயக்குனர் நெல்சன் மற்றும் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். பீஸ்ட் என்று பெயர் வைத்து வெளியிடப்பட்ட இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தற்போது மேலும் ஒரு அறிவிப்பை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். நள்ளிரவு 12 மணிக்கு 2வது போஸ்டர் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்து உள்ளனர்....
கொரோனா நிவாரண நிதியாக ரூ.5 லட்சம் வழங்கினார் இயக்குனர் சுசீந்திரன்!

கொரோனா நிவாரண நிதியாக ரூ.5 லட்சம் வழங்கினார் இயக்குனர் சுசீந்திரன்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
கொரோனா நிவாரண நிதியாக ரூ.5 லட்சம் வழங்கினார் இயக்குனர் சுசீந்திரன்! கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் நன்கொடை வழங்குமாறு தமிழக முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து திரைப்பிரபலங்கள் பலரும் முதல்வரை நேரில் சந்தித்தும், ஆன்லைன் மூலமாகவும் நிதியுதவி அளித்து வருகின்றனர். அந்த வகையில் சிம்புவின் ஈஸ்வரன் படத்தை இயக்கிய இயக்குனர் சுசீந்திரன், முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சம் வழங்கி உள்ளார். கடந்த ஜூன் 14-ம் தேதி ஆன்லைனில் திரைப்பட இயக்கம் மற்றும் நடிப்பு பயிற்சி வகுப்பு நடத்திய சுசீந்திரன், அதன்மூலம் ரூ.5 லட்சம் நிதி திரட்டினார். அந்த தொகையை தான் தற்போது கொரோனா தடுப்பு பணிகளுக்காக அவர் வழங்கி உள்ளார். இயக்குனர் சுசீந்திரன், ரூ.5 லட்சத்துக்கான காசோலையை, நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினிடம்...
கே.ஜி.எப் நடிகர் யாஷுக்கு ஜோடியாகும் தமன்னா!

கே.ஜி.எப் நடிகர் யாஷுக்கு ஜோடியாகும் தமன்னா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
கே.ஜி.எப் நடிகர் யாஷுக்கு ஜோடியாகும் தமன்னா! கன்னடத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி ஆகியோர் நடித்து வெற்றிபெற்ற படம் ‘மப்டி’. இப்படத்தை நார்தன் என்பவர் இயக்கி இருந்தார். இப்படம் தான் தற்போது, தமிழில் ‘பத்து தல’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இப்படத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்கிறார். முதலில் இப்படத்தை நார்தன் தான் இயக்கினார். பின்னர் அவர் விலகியதால் ஓபிலி கிருஷ்ணா இயக்குனராக ஒப்பந்தமாகி உள்ளார். சிம்பு படம் கைநழுவி போனதால், இயக்குனர் நார்தன், அடுத்ததாக கேஜிஎப் நடிகர் யாஷ் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்க தயாராகி வருகிறார். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் யாஷுக்கு ஜோடியாக நடிகை தமன்னா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகை தமன்னா ஏற்கனவே கே.ஜி.எப்...
ஊரடங்கில் தளர்வு – சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி!

ஊரடங்கில் தளர்வு – சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
ஊரடங்கில் தளர்வு - சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி! தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாக வேகமாக பரவி வந்த கொரோனா தொற்றின் இரண்டாவது அலை, தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கிலும் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. கொரோனா ஊரடங்கு காரணமாக சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் கடந்த 2 மாதங்களாக நடைபெறாமல் இருந்தன. தற்போது அவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. வருகிற ஜூன் 21ந் தேதி முதல், அதிகபட்சம் 100 பேருடன் படப்பிடிப்பை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் படப்பிடிப்பில் கலந்துகொள்பவர்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதேபோல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது....
‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் முக்கிய அப்டேட்!

‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் முக்கிய அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் முக்கிய அப்டேட்! விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனமும், விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சமந்தா, நயன்தாரா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் பாடல் கடந்த பிப்ரவரி மாதம் காதலர் தினத்தன்று வெளியிடப்பட்டது. இந்நிலையில், அடுத்த பாடல் எப்போது வெளியிடப்படும் என்பது குறித்த அப்டேட்டை இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார். அதன்படி வருகிற ஜூலை மாதம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார். சமூக வலைதளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடிய போது அவர் இதனை தெரிவித்தார்...
‘சூர்யா 40’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

‘சூர்யா 40’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘சூர்யா 40’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்! நடிகர் சூர்யாவின் 40-வது படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக இளம் நடிகை பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் திவ்யா துரைசாமி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, சத்யராஜ், சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். டி இமான் இசையமைக்கிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு, கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சூர்யா 40 படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்குவது எப்போது என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூலை 2-வது வாரத்தில் மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் நடித்து முடித்த பின், நடிகர் சூர்யா, வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிட...
லைகா பட நிறுவனம் சார்பில் கொரானா நிவாரண நிதியாக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்ட ரூ.2 கோடிக்கான காசோலை!

லைகா பட நிறுவனம் சார்பில் கொரானா நிவாரண நிதியாக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்ட ரூ.2 கோடிக்கான காசோலை!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  லைகா பட நிறுவனம் சார்பில் கொரானா நிவாரண நிதியாக ரூ.2 கோடிக்கான காசோலை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது! பிரபலமான பட தயாரிப்பு நிறுவனமான லைகா பட நிறுவனம் சார்பில் முதல்வர் நிவாரண நிதிக்காக ரூ.2 கோடி அளிக்க அதன் தலைவர் சுபாஷ்கரன் முடிவு செய்தார். அதன் பேரில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை தலைமைச் செயலகத்தில், லைகா புரோடக்சன்ஸ் சுபாஸ்கரன் சார்பில் அதன் முதன்மை செயல் அலுவலர் ஜி.கே.எம். தமிழ்குமரன், இயக்குனர் ராஜாசுந்தரம் நிருதன் மற்றும் கெளரவ் சச்ரா ஆகியோர் சந்தித்து, கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 2 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்கள். அவர்களோடு, நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார். ...
கிரிக்கெட் விளையாடி அசத்திய யோகி பாபு!

கிரிக்கெட் விளையாடி அசத்திய யோகி பாபு!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
கிரிக்கெட் விளையாடி அசத்திய யோகி பாபு! தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி கதாநாயகனாக வலம் வருபவர் யோகி பாபு. இவர் விஜய், அஜித், சிவகார்த்திகேயன் போன்ற பல டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் சில திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான மண்டேலா திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது நடிகர் யோகிபாபு அரண்மனை-3, கடைசி விவசாயி, டிக்கிலோனா உள்ளிட்ட பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் நடிகர் யோகிபாபு கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது. https://twitter.com/iYogiBabu/status/1405610446481018881?s=20...