முன்கூட்டியே முடியும் பார்லிமெண்ட் கூட்டத்தொடர்… சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல்களுக்கு மட்டுமே அனுமதி… இதெல்லாம் கொரானா பீதியால்!
முன்கூட்டியே முடியும் பார்லிமெண்ட் கூட்டத்தொடர்... சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல்களுக்கு மட்டுமே அனுமதி... இதெல்லாம் கொரானா பீதியால்!
உலகை பெருமளவில் அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் பாதிப்பு இருக்குமோ என்ற சந்தேகத்தில் இந்தியாவில் மட்டும் சுமார் 25 ஆயிரம் பேர் மருத்துவர் கண்காணிப்பில் இருக்கிறார்கள்.
கொரோனா வைரசை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மாநில அரசுகளும் மருத்துவ பரிசோதனைகளை உடனுக்குடன் செய்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அதிகளவில் ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப முக்கிய விழாக்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.
தற்போது பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்த கூட்டத் தொடரை ஏப்ரல் மாதம் 3-ந்தேதி வரை நடத்த முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது.
இதற்கிடையே, நாடு முழுவதும் கொரோனா வைரஸ...