கொரோனா எதிரொலியால் டெல்லியில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லுரிகள் வரும் மார்ச் 31ம் தேதி வரை மூடப்படும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
அதாவது, தேர்வு நடைபெறாத பள்ளிகள் மற்றும் கல்லுரிகள், திரையரங்குகள் மூடப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். துணைநிலை ஆளுநர் அனில் பைஜால்-வுடனான சந்திப்புக்கு பின் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார்.
அதேசமயம் பொதுமக்கள் ஓன்று கூடுவதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக டெல்லி அரசு ஆரம்ப பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
992 Views