கொரானாவால் எல்லாம் மூடியிருக்கு சட்டசபையும், டாஸ்மாக் மட்டும் திறந்திருக்கு – சட்டசபையில் துரைமுருகன் பேச்சு
கொரானாவால் எல்லாம் மூடியிருக்கு சட்டசபையும், டாஸ்மாக் மட்டும் திறந்திருக்கு - சட்டசபையில் துரைமுருகன் பேச்சு
கொரோனாவால், டாஸ்மாக்கும் மூடப்படவில்லை, சட்ட சபையும் மூடப்படவில்லை என்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் கூறி இருக்கிறார்.
உலகத்தையே ஸ்தம்பிக்க வைத்து கடும் பீதியை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை.
சுமார் 140 பேர்களுக்கு வைரஸ் தாக்கம் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரானா பாதிப்பால் இதுவரை இந்தியாவில் 4 பேர் பலியாகி உள்ளனர்.
இதையடுத்து, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரமாக முன்னெடுத்துள்ளது. ஏற்கனவே வணிக வளாகங்கள், தியேட்டர்கள், கல்வி நிலையங்கள், டாஸ்மாக் பார்கள் என பொதுமக்கள் அதிகமாக கூடும் அனைத்து இடங்களும் மூடப்பட்டுள்ளன.
இந் நிலையில் கொரோனா பற்றி சட்டமன்றத்தில் எ...