வியாழக்கிழமை, மார்ச் 28
Shadow

எனக்கெல்லாம் கொரானா வரவே வராது – சொல்கிறார் நித்தி!

 

எனக்கெல்லாம் கொரானா வரவே வராது – சொல்கிறார் நித்தி!

சர்ச்சைகளுக்கு பெயர் பெற்ற சாமியார் நித்யானந்தா மீது கடத்தல், கற்பழிப்பு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.

கடத்தல் வழக்கில் குஜராத் போலீசார் நித்யானந்தாவை தேடியபோது அவர் பெண் சீடர்களுடன் வெளிநாடு தப்பி ஓடியது தெரிய வந்தது. ஈக்வேடார் அருகே கைலாசா என்ற பெயரில் ஒரு தீவை அமைத்து தனி நாடாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

கைலாசா நாட்டில் குடியேற 40 லட்சம் பேர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளதாக நித்யானந்தா வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதற்கிடையே கற்பழிப்பு வழக்கில் நித்யானந்தாவுக்கு வழங்கப்பட்டிருந்த ஜாமீனை ரத்து செய்து கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் அவரை கைது செய்ய பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது.

நித்யானந்தாவை கைது செய்ய சர்வதேச போலீஸ் உதவியை போலீசார் நாடினர். இதையடுத்து புளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பித்து நித்யானந்தாவை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஆனால் இதுவரை நித்தியானந்தா இருக்கும் இடம் கூட கண்டுபிடிக்கப்படவில்லை. அதே நேரம் தினமும் சத்சங்கம் எனற பெயரில் நித்தியானந்தா ஏதாவது பேசி வருகிறார்.

அதே போல ஸ்ரீகைலாசா என்ற புதிய நாட்டின் பிரதமர் என்று தன்னைத் தானே அறிவித்துக் கொண்ட நித்யானந்தா தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியதுதான் காமெடி ரகம்.


அப்படி என்ன சொல்லியிருக்கிறார்: “கொரோனா வைரசால் நாங்கள் பாதிக்கப்படவில்லை. இது எதிர்காலத்திலும் எங்களுக்கு வராது. ஏனென்றால் பரமசிவன் எங்களைப் பாதுகாக்கிறார். காலபைரவர் எங்களுக்கு பாதுகாவலாக உள்ளார்.” என குறிப்பிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.

காரணம் உலகம் முழுதும் கொரானா வைரஸ் பீதி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. உலக வல்லரசு நாடுகளே கொரானா பீதியில் பயந்து போன நிலையில் நித்தியானந்தாவின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியது.

746 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன