எனக்கென கைலாசா தனி நாடு… தனி மக்கள்… தனி கரன்சி கெத்து காட்டும் நித்தி!
கைலாச நாடு என சாமியார் நித்தியானந்தா ஏதோ விளையாட்டுக்கு சொல்லிக் கொண்டு இருக்கிறார் என்றே நினைத்துக் கொண்டிருந்தார்கள் பலர்.
ஆனால், நிஜத்தில் அப்படி ஒரு நாட்டை உருவாக்கி கரன்சி வரைக்கும் ரெடி இதே அறிவிக்க போகிறேன் என மீண்டும் அனைவர் கவனத்தையும் தன் பக்கம் திருப்பி இருக்கிறார் நித்தியானந்தா.
ஒரு கட்டத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்த நித்தியானந்தா, திடீரென வழக்கு, பாலியல் குற்றச்சாட்டு, ஆள் கடத்தல் என தொடர் புகார்கள் வந்ததும் திடுதிப்பென ஆளே அட்ரஸ் இல்லாமல் காணாமல் போனார்.
இடையில் அவரைப் பற்றி எந்த ஒரு செய்தியும் வெளியாகாமல் இருந்தது.
அதன் பின் தனி நாடு உருவாக்கி விட்டார் அதன் பெயர் கைலாசா என்றெல்லாம் பரபரப்பு கிளம்பியது. நித்தியும் தினமும் ஒரு வீடியோ போட்டு சமூக வலதள பக்கத்தில் அடித்து ஆடிக் கொண்டிருந்தார்.
பிறகு திடீரென மவுனமாகி சத்தமில்லாமல் ...