நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை!
பிகில் பட விவகாரம் தொடர்பாக ஏற்கனவே வருமான வரித்துறை அதிகாரிகள் நடிகர் விஜய் வீட்டில் 48 மணி நேரம் சோதனை செய்தனர். அதற்கு முன் மாஸ்டர் ஷூட்டிங் ஸ்பாட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் நுழைந்து ஷூட்டிங்கை நிறுத்தி விட்டு விஜய்யை அழைத்து வந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த சூழலில் மாஸ்டர் படத்தின் ஆடியோ வெளியீடு வரும் 15ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில்
மாஸ்டர் படத்தின் இணைத் தயாரிப்பாளர் லலித் குமார் வீட்டில் கடந்த 2 நாட்களாக வருமானவரித்துறை திடீர் சோதனை நடத்தியது. மாஸ்டர் பட வியாபாரம் தொடர்பாக இந்த சோதனை நடந்ததாம்.
அதன் அடிப்படையில் மீண்டும் விஜய் வீட்டில் சோதனை நடை பெறுகிறது.
ஒவ்வொரு பட ஆடியோ விழாவின் போதும் விஜய் குட்டிக்கதைகள் மூலம் ஆளுங்கட்சியின் அவலங்களை குறிப்பிடுவது வழக்கம்.
இப்போதைய தொடர் ரெய்டு சொல்லும் சேதி வரப்போகும் மாஸ்டர் ஆடியோ விழாவில் விஜய் வாய் திறக்காமல் இருக்க வைக்கும் முயற்சி என்பது குழந்தைகளுக்கு கூட தெரிகிறது.