சனிக்கிழமை, ஏப்ரல் 27
Shadow

CINI NEWS

தியேட்டர்கள் மூடப்பட்டதால் ஓடிடி ரிலீசுக்காக வரிசைகட்டும் புதுப்படங்கள்!

தியேட்டர்கள் மூடப்பட்டதால் ஓடிடி ரிலீசுக்காக வரிசைகட்டும் புதுப்படங்கள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தியேட்டர்கள் மூடப்பட்டதால் ஓடிடி ரிலீசுக்காக வரிசைகட்டும் புதுப்படங்கள்! தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருவதன் காரணமாக, தமிழக அரசு அனைத்து தியேட்டர்களையும் மூடி உள்ளது. இதனால் திரைக்கு வர தயாராக இருந்த பல படங்கள் ஓடிடி தளங்களின் பக்கம் திரும்பி உள்ளன. இதற்கான பேச்சுவார்த்தை முழுவீச்சில் நடக்கின்றன. விஜய்சேதுபதி நடித்துள்ள மாமனிதன், லாபம், யாதும் ஊரே யாவரும் கேளிர், கடைசி விவசாயி, துக்ளக் தர்பார் ஆகிய 5 படங்கள் திரைக்கு வர தயாராக உள்ளன. இதில் துக்ளக் தர்பார் படத்தை ஓடிடியில் வெளியிட ஏற்கனவே பேச்சுவார்த்தை நடந்தது. தற்போது ஓடிடியில் வெளியிடுவது உறுதியாகி இருப்பதாக கூறப்படுகிறது. இதுதவிர சிவகார்த்திகேயனின் டாக்டர் படமும் ஓடிடியில் வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் பீட்சா படத்தின் 3-ம் பாகத்தையும் ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்...
கொரோனா பாதிப்பு எதிரொலி…. விஜய் சேதுபதியின் பாலிவுட் பட ஷூட்டிங் ஒத்திவைப்பு!

கொரோனா பாதிப்பு எதிரொலி…. விஜய் சேதுபதியின் பாலிவுட் பட ஷூட்டிங் ஒத்திவைப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
கொரோனா பாதிப்பு எதிரொலி.... விஜய் சேதுபதியின் பாலிவுட் பட ஷூட்டிங் ஒத்திவைப்பு! இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் ‘அந்தாதூன்’. 3 தேசிய விருதுகளை வென்ற இப்படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்கி இருந்தார். இவர் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகும் படம் ‘மெரி கிறிஸ்துமஸ்’. இப்படத்தில் விஜய் சேதுபதி நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்பும் நடிக்க ஒப்பந்தமாகினார். இப்படத்தின் படப்பிடிப்பை ஏப்ரல் 15-ந் தேதி தொடங்க திட்டமிட்டு இருந்தனர். அந்த சமயத்தில் நடிகை கத்ரீனா கைப் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததால், படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. தற்போது அவர் கொரோனாவில் இருந்து மீண்ட போதிலும், நாட்டில் கொரோனா பாதிப்பு தீவிரமாகி வருவதால், படப்பிடிப்பை காலவரையின்றி ஒத்திவைத்துள்ளனர். இதுதவிர நடிகர் விஜய் சேதுபதி காந்தி டாக்கீஸ், மும்பைகார் ப...
லோகேஷ் கனகராஜிடம் ‘விக்ரம்’ படக்கதையில் மாற்றம் செய்யச் சொன்ன கமல்!

லோகேஷ் கனகராஜிடம் ‘விக்ரம்’ படக்கதையில் மாற்றம் செய்யச் சொன்ன கமல்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
லோகேஷ் கனகராஜிடம் ‘விக்ரம்’ படக்கதையில் மாற்றம் செய்யச் சொன்ன கமல்! இந்தியன் 2 படப்பிடிப்பு முடங்கி உள்ளதால் கமல்ஹாசன் அடுத்து விக்ரம் படத்தில் நடிக்க தயாராகி உள்ளார். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இவர் மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களை இயக்கி பிரபலமானவர். விக்ரம் படப்பிடிப்பை மே 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் தொடங்க திட்டமிட்டு உள்ளனர். இந்நிலையில், விக்ரம் படத்தின் திரைக்கதை முழுவதையும் படித்த கமல்ஹாசன், அதில் சில மாற்றங்கள் செய்யும்படி தெரிவித்து இருப்பதாகவும், லோகேஷ் கனகராஜும் சில காட்சிகளை மாற்றி எழுதி வருவதாகவும் தகவல் பரவி வருகிறது. இந்த படத்தில் மலையாள நடிகர் பகத் பாசிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். விக்ரம் அதிரடி சண்டை படமாக தயாராகிறது. இதற்கிடையில் இந்தியன் 2 படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அந்த படத்த...
தயாரிப்பாளரும், அருண் விஜய்யின் மாமனாருமான என்.எஸ்.மோகன் காலமானார்!

தயாரிப்பாளரும், அருண் விஜய்யின் மாமனாருமான என்.எஸ்.மோகன் காலமானார்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
தயாரிப்பாளரும், அருண் விஜய்யின் மாமனாருமான என்.எஸ்.மோகன் காலமானார்! தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். இவர் நடித்த வா டீல், மாஞ்சா வேலு, மலை மலை, தடையறத் தாக்க போன்ற படங்களை தயாரித்தவர் என்.எஸ்.மோகன். அருண் விஜய்யின் மாமனாரான இவர், சமீப காலமாக மூச்சுத் திணறல் பிரச்னையால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக சிகிச்சை பெற்றுவந்த என்.எஸ்.மோகன் இன்று காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஒரேநாளில் இயக்குனர் தாமிரா, தயாரிப்பாளர் என்.எஸ்.மோகன் என அடுத்தடுத்து இருவர் மறைந்தது, தமிழ் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது....
கொரோனா நிவாரணமாக ரூ.1 கோடி வழங்கினார் நடிகர் அக்‌ஷய் குமார்!

கொரோனா நிவாரணமாக ரூ.1 கோடி வழங்கினார் நடிகர் அக்‌ஷய் குமார்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
கொரோனா நிவாரணமாக ரூ.1 கோடி வழங்கினார் நடிகர் அக்‌ஷய் குமார்! தமிழில் ஷங்கர் இயக்கிய 2.0 படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாக நடித்த அக்‌ஷய் குமார், பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கிறார். சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அக்‌ஷய் குமார் சிகிச்சைக்கு பின் மீண்டார். தற்போது நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை தீவிரமாகி உள்ள நிலையில் நடிகர் அக்‌ஷய் குமார், ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கி இருக்கிறார். இந்தத் தொகையை கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் நடத்தும் தொண்டு நிறுவனத்துக்கு அளித்துள்ளார். இதற்கு டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ள கவுதம் கம்பீர், “தேவைப்படுபவர்களுக்கு உணவு, மருத்துவ உதவி, ஆக்‌சிஜன் வழங்க ரூ.1 கோடி நன்கொடை அளித்த அக்‌ஷய்குமாருக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார். கடந்த வருடம் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்ததும், பிரதமர் நரேந்திர மோடி கொரோனாவை எதிர்கொள்ள நிதி வழங்குமாறு வேண்டுகோள் ...
கொரோனா பாதிப்பால் இயக்குனர் தாமிரா மரணம்!

கொரோனா பாதிப்பால் இயக்குனர் தாமிரா மரணம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள்
கொரோனா பாதிப்பால் இயக்குனர் தாமிரா மரணம்! மறைந்த இயக்குனர் கே பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர் தாமிரா. இவர், இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான ‘ரெட்டைச் சுழி’ என்கிற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். முதல் படத்திலேயே தமிழ் சினிமாவின் இரண்டு உச்ச இயக்குனர்களான பாலச்சந்தர் மற்றும் பாரதிராஜாவை சேர்த்து நடிக்க வைத்து கவனம் ஈர்த்தார். இதன்பின் சமுத்திரகனி, ரம்யா பாண்டியன் ஆகியோர் நடிப்பில் வெளியான ‘ஆண் தேவதை’ படத்தை இயக்கியிருந்தார் தாமிரா. அண்மையில் இயக்குனர் தாமிராவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று காலை, இயக்குனர் தாமிரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 53. இயக்குனர் தாமிராவின் மறைவுக்கு திரையு...
கொரோனா தொற்று அறிகுறி… தனிமைப்படுத்திக் கொண்ட நடிகை நந்திதா!

கொரோனா தொற்று அறிகுறி… தனிமைப்படுத்திக் கொண்ட நடிகை நந்திதா!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
கொரோனா தொற்று அறிகுறி... தனிமைப்படுத்திக் கொண்ட நடிகை நந்திதா! நடிகை நந்திதா, பா.ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதை தொடர்ந்து எதிர் நீச்சல், இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, புலி, கபடதாரி, நெஞ்சம் மறப்பதில்லை என வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்து கவனம் பெற்றார். தற்போது ‘ஐ.பி.சி. 376’, ‘வணங்காமுடி’ போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில், கொரோனா தொற்று அறிகுறிகள் உள்ளதால் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக நடிகை நந்திதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “எனக்கு கொரோனா அறிகுறிகள் உள்ளன. இதையடுத்து என்னை தனிமைப்படுத்திக்கொண்டு இருக்கிறேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். முன்னணி நடிகர், நடிகைகள் தொடர்ச்சியாக கொரோனாவில் சிக்குவது திரையுலகிலும...
நடிகர் அல்லு அர்ஜுனுக்கு தங்கையாக நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு தங்கையாக நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
நடிகர் அல்லு அர்ஜுனுக்கு தங்கையாக நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்! சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படம் புஷ்பா. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் மலையாள நடிகர் பஹத் பாசில் வில்லனாக நடிக்கிறார். இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், அவரது கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், புஷ்பா படத்தில், அல்லு அர்ஜுனுக்கு தங்கையாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது....
தனுஷை தொடர்ந்து பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் ரஜிஷா விஜயன்!

தனுஷை தொடர்ந்து பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் ரஜிஷா விஜயன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
தனுஷை தொடர்ந்து பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் ரஜிஷா விஜயன்! மலையாளத்தில் கடந்த 2016ல் வெளியான ‘அனுராக கரிக்கின் வெள்ளம்’ என்கிற படத்தின் மூலம் அறிமுகமான ரஜிஷா விஜயன், தனது முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான மாநில அரசு விருதை வென்றார். தொடர்ந்து மலையாளத்தில் நடித்து வரும் இவர், அண்மையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இப்படத்தில் அவரது எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில், நடிகை ரஜிஷா விஜயன் மேலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அதன்படி பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகும் ‘சர்தார்’ படத்தில் நடிகர் கார்த்தி-க்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இப்படத்தில் மற்றொரு நாயகியாக ராஷி கண்ணாவும் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சர்தார் படத்தில் நடிகர் கார்த்தி இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார...
இந்திய நடிகர் இர்பான் கானுக்கு ஆஸ்கர் விழாவில் அஞ்சலி!

இந்திய நடிகர் இர்பான் கானுக்கு ஆஸ்கர் விழாவில் அஞ்சலி!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
இந்திய நடிகர் இர்பான் கானுக்கு ஆஸ்கர் விழாவில் அஞ்சலி! உலகளவில் திரைப்படத் துறையில் மிக உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர் எனும் அகாடமி விருது. இந்த விருதை வெல்வது படைப்பாளிக்கு மிகப்பெரிய கவுரவமாக கருதப்படுகிறது. வழக்கமாக பிப்ரவரி மாதம் நடத்தப்படும் ஆஸ்கர் விருது, இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக, 2 மாதங்கள் தாமதமாக நடத்தப்பட்டது. அந்தவகையில் 93-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று நடைபெற்றது. கடந்த ஆண்டை போலவே இந்தாண்டும் தொகுப்பாளர்கள் இல்லாமல் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு விழா நடந்தது. இந்த விருது வழங்கும் விழாவில், கடந்தாண்டு உயிரிழந்த முக்கியமான நடிகர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதில் கடந்தாண்டு புற்றுநோயால் உயிரிழந்த இந்திய நடி...