செவ்வாய்க்கிழமை, மே 14
Shadow

HOME SLIDER

ஐஸ்வர்யா ராயை குடும்பத்தினருடன் சந்தித்த வரலட்சுமி சரத்குமார்!

ஐஸ்வர்யா ராயை குடும்பத்தினருடன் சந்தித்த வரலட்சுமி சரத்குமார்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
ஐஸ்வர்யா ராயை குடும்பத்தினருடன் சந்தித்த வரலட்சுமி சரத்குமார்! ‘பொன்னியின் செல்வன்’ நாவலை இயக்குனர் மணிரத்னம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் படமாக்கி வருகிறார். இதில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய், பிரபு, விக்ரம் பிரபு, திரிஷா, ஜெயராம், லால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிக்கின்றனர். ரூ.800 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட உள்ளனர். கொரோனா 2-வது அலை காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் நிறுத்தப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மீண்டும் புதுச்சேரியில் தொடங்கி உள்ளது. ஐஸ்வர்யா ராய் நடிக்கும் காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டு வருகின்றன. இந்த படத்தில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். புதுச்சேரியில் ஷூட்டிங்கில் இருக்கும் சரத்குமாரை பார்ப்பதற்காக அவரின் மகள்களான வரலட்சுமியும், பூஜாவும் சென்றுள்ளனர். அங்கு ...
முயற்சிகள் பலனளிக்கவில்லை… கணவரை பிரிந்தார் மியா கலிஃபா!

முயற்சிகள் பலனளிக்கவில்லை… கணவரை பிரிந்தார் மியா கலிஃபா!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
முயற்சிகள் பலனளிக்கவில்லை... கணவரை பிரிந்தார் மியா கலிஃபா! ஆபாச திரைப்படங்களில் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் மியா கலிஃபா. இவர் கடந்த 2011ம் ஆண்டு தனது பள்ளி காதலனை திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 2016ம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். இதையடுத்து ஸ்வீடனை சேர்ந்த சமையல் கலைஞர் ராபர்ட் சாண்ட்பர்க்குடன் தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக கடந்த 2020 மார்ச் மாதம் அறிவித்திருந்தார். கொரோனா பிரச்சனை காரணமாக இருவரும் எளிமையான முறையில் வீட்டிலே திருமணம் செய்து கொண்டதாக அறிவித்தனர். இந்நிலையில், நாங்கள் இருவரும் பிரிந்து வெவ்வேறு பாதையில் செல்ல திட்டமிட்டுள்ளதாக மியா அறிவித்துள்ளார். இதுதொடர்பாக மியா கலிஃபா கூறியுள்ளதாவது, கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக எங்களது திருமண உறவை தக்கவைத்துக் கொள்ள நாங்கள் போதுமான முயற்சிகள் எடுத்தும் அது பலனளிக்கவில்லை. அத...
கார் விபத்து – நடிகை யாஷிகா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

கார் விபத்து – நடிகை யாஷிகா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
கார் விபத்து - நடிகை யாஷிகா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு! நடிகை யாஷிகா ஆனந்த், தனது நண்பர்களுடன் நேற்று நள்ளிரவில் காரில் பயணம் செய்திருக்கிறார். அப்போது மாமல்லபுரம் அருகே உள்ள சூளேரிக்காடு பகுதியில் சென்றபோது அவர் சென்ற கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி வள்ளிச்செட்டி பவணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த யாஷிகா மற்றும் அவரது இரண்டு ஆண் நண்பர்கள் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், நடிகை யாஷிகா அதிவேகமாக கார் ஓட்டி வந்ததே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது. இதையடுத்து நடிகை யாஷிகா மீது அதிவேகமாக கார் ஓட்டியது, உயிர்சேதம் ஏற்படுத்தியது என்பன உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்...
HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா இன்று பதவி விலகுகிறார்! கர்நாடகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 26-ந் தேதி எடியூரப்பா 4-வது முறையாக முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். 75 வயதை தாண்டிய தலைவர்களுக்கு பாஜகவில் கட்டாய ஓய்வு அளிக்கப்படுகிறது. ஆனால் அதில் இருந்து 76 வயதான எடியூரப்பாவுக்கு விலக்கு அளித்து அவருக்கு முதல்-மந்திரி பதவியை பாஜக மேலிடம் வழங்கியது. அப்போதே 2 ஆண்டுகள் முடிந்ததும் முதல்-மந்திரி பதவியை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. அந்த நிபந்தனையை எடியூரப்பா ஏற்றுக் கொண்டார். அதன்படி எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவி ஏற்று இன்றுடன் (திங்கட்கிழமை) 2 ஆண்டுகள் நிறைவடைகின்றன. கடந்த 16-ந் தேதி டெல்லி சென்ற எடியூரப்பா, பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை நேரில் சந்தித்து பேசினார். அப்போது 2 ஆண்டுகள் நிறைவடைவதால் நிபந்தன...
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்! சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன. சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் 102.49 ரூபாய், டீசல் லிட்டர் 94.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், தொடர்ந்து 10-வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது....
22-வது ஆண்டு வெற்றி விழா: கார்கில் போர் நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அஞ்சலி!

22-வது ஆண்டு வெற்றி விழா: கார்கில் போர் நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அஞ்சலி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
22-வது ஆண்டு வெற்றி விழா: கார்கில் போர் நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அஞ்சலி! 1999-ம் ஆண்டு நடந்த கார்கில் போரில் பாகிஸ்தானை இந்தியா தோற்கடித்தது. இதன் 22-வது வெற்றி விழா இன்று கொண்டாடப்பட்டது. கார்கில் போர் நினைவுச் சின்னம் கார்கிலில் உள்ள டராஸ்சில் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு போரில் உயிர் இழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. கார்கில் போரில் 559 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தார்கள். அதை நினைவூட்டும் வகையில் நினைவுச்சின்னத்தில் 559 விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டு இருந்தன. முதலாவதாக இன்று காலை முப்படை தளபதி பிபின்ராவத் கார்கில் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அதை தொடர்ந்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஸ்ரீநகரில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக டராஸ் சென்றார். அவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் கார்கில் வெற்றிவிழா அங்கு நடத்தப்படுக...
டாக்டர் சைமன் உடலை தோண்டி எடுக்கும் விவகாரம் வழக்கு வாபஸ்!

டாக்டர் சைமன் உடலை தோண்டி எடுக்கும் விவகாரம் வழக்கு வாபஸ்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  மருத்துவர் சைமன் உடலை தோண்டி எடுக்க ஆட்சேபனை இல்லை: வழக்கை வாபஸ் பெற்றது சென்னை மாநகராட்சி கரோனா பாதிப்பால் உயிரிழந்த மருத்துவர் ஹெர்குலஸ் சைமன் உடலை வேலங்காடு இடுகாட்டிலிருந்து தோண்டி எடுத்து, கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்ய வேண்டுமென்ற தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கை சென்னை மாநகராட்சி வாபஸ் பெற்றுள்ளது. கரோனா வைரஸ் பாதிப்பால் மரணமடைந்த நரம்பியல் மருத்துவர் ஹெர்குலஸ் சைமன் உடலை, கடந்த ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்ய சென்றபோது பொது மக்களின் எதிர்ப்பால், வேலாங்காடு இடுகாட்டில் சென்னை மாநகராட்சி அடக்கம் செய்தது. இந்நிலையில், வேலங்காட்டிலிருந்து கணவரின் உடலை உடலை தோண்டி எடுத்து, கிறிஸ்தவ முறைப்படி கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யக் கோரி மனைவி ஆனந்தி, சென்னை மாநகராட்...
தந்தை பட டைட்டிலை கைப்பற்றிய சூர்யா!

தந்தை பட டைட்டிலை கைப்பற்றிய சூர்யா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தந்தை பட டைட்டிலை கைப்பற்றிய சூர்யா! நடிகர் சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக இளம் நடிகை பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் திவ்யா துரைசாமி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, சத்யராஜ், சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று வெளியிட்டுள்ளனர். இதுவரை சூர்யா 40 என்று அழைத்து வந்த இப்படத்திற்கு ‘எதற்கும் துணிந்தவன்’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். இதற்குமுன் ‘எதற்கும் துணிந்தவன்’ என்ற தலைப்பில் நடிகர் சிவக்குமார் நடித்த படம் 1976 ஆம் ஆண்டு வெளியாகி இருக்கிறது....
எனிமி படத்தின் டீசர் ரிலீஸ் அறிவிப்பு… ரசிகர்கள் உற்சாகம்!

எனிமி படத்தின் டீசர் ரிலீஸ் அறிவிப்பு… ரசிகர்கள் உற்சாகம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
எனிமி படத்தின் டீசர் ரிலீஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்! பாலா இயக்கத்தில் ஆர்யா, விஷால் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘அவன் இவன்’. இப்படத்தில் இருவரும் நெருங்கிய நண்பர்களாக நடித்திருந்தார்கள். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு இருவரும் இணைந்து ‘எனிமி’ என்ற படத்தில் நடித்து வருகிறார்கள். இப்படத்தை அரிமா நம்பி, இருமுகன், நோட்டா போன்ற படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கி வருகிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக மிருணாளினியும், ஆர்யாவுக்கு ஜோடியாக மம்தா மோகன்தாஸும் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. இந்நிலையில், எனிமி படத்தின் டீசரை ஜூலை 24 ஆம் தேதி (நாளை) மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்....
நூற்றாண்டு விழா- பாலகங்காதர திலகருக்கு பிரதமர் மோடி புகழாரம்!

நூற்றாண்டு விழா- பாலகங்காதர திலகருக்கு பிரதமர் மோடி புகழாரம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
நூற்றாண்டு விழா- பாலகங்காதர திலகருக்கு பிரதமர் மோடி புகழாரம்! சுதந்திர போராட்ட வீரர் பாலகங்காதர திலகரின் நூற்றாண்டு விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பிரதமர் மோடி  அவரது உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நாட்டிற்கு செய்த பங்களிப்புகளை நினைவு கூர்ந்தார். இதுதொடர்பாக பிரதமர் மோடி  தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:- பாலகங்காதர திலகரின் கல்வி மற்றும் பெண்கள் அதிகாரம் குறித்த கருத்துக்கள் தொடர்ந்து பலரை ஊக்குவித்து வந்தது. அவர் நடத்திய நிறுவனங்கள் மூலம் மக்களுக்கு பல்வேறு பணிகளை செய்துள்ளார். அவரது பிறந்தநாளையொட்டி அவரை நான் வணங்குகிறேன். தற்போதைய சூழ்நிலைகளில் அவருடைய எண்ணங்களும், கொள்கைகளும் மிகவும் பொருத்தமானவை. பொருளாதார ரீதியாக வளமான இந்தியா மற்றும் சமூக ரீதியாக முற்போக்கான பாரதத்தை உருவாக்க அவர் முயன்றார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்....