முதல்வர் ஸ்டாலினுக்கு விடுதலை சிறுத்தைகள் எம்பி திடீர் கோரிக்கை!
உச்சநீதிமன்ற ஆணையின் அடிப்படையில் பேரறிவாளனுக்கு பரோல் வழங்குங்கள்
மாண்புமிகு தமிழக முதல்வருக்கு ரவிக்குமார் எம்.பி வேண்டுகோள்
முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில் பின்வருமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்:
“ கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் இந்தியாவெங்கிலுமுள்ள சிறைகளில் இருக்கும் சிறைவாசிகளின் எண்ணிக்கையைக் குறைப்பது குறித்து உச்சநீதிமன்றம் தானே முன்வந்து கடந்த ஆண்டு வழக்கு பதிவு செய்தது (Suo Motu writ Petition ( C ) No.1 /2020). நேற்று (07.05.2021) அவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முக்கியமான சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவின் நான்காவது அம்சமாக, ”ஏற்கனவே உச்சநீதிமன்றத்தால் பரோல் வழங்கப்பட்ட சிறைவாசிகளுக்கு மேலும் 90 நாட்கள் பரோல் வழங்க வேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
“we dire...