சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

Tag: அமீத்ஷா

எனக்கு எந்த வியாதியும் இல்லை – அமீத்ஷா அறிவிப்பு

எனக்கு எந்த வியாதியும் இல்லை – அமீத்ஷா அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  எனக்கு எந்த வியாதியும் இல்லை - அமீத்ஷா அறிவிப்பு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்தநிலையில் யாரோ விஷமிகள், அமித்ஷா தனக்கு பயங்கரமான நோய் தாக்கி இருப்பதாக கூறி பிரார்த்தனையில் ஈடுபடுமாறு வேண்டுகோள் விடுத்து டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டதுபோல போலியாக ‘ஸ்கிரீன் ஷாட்’ தயாரித்து அதை மற்றொரு சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விட்டனர் இதுகுறித்து அமித்ஷாவின் கவனத்துக்கு நேற்று கொண்டு செல்லப்பட்டது. உடனே அவர் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறி இருப்பதாவது:- கடந்த சில நாட்களாக சில நண்பர்கள் எனது உடல்நிலை குறித்து பல சுவாரசியமான வதந்திகளை சமூக ஊடகங்கள் வழியாக பரப்பி உள்ளனர். எனது மரணத்துக்காகவும் பலர் ‘டுவிட்’ செய்து, பிரார்த்தனை செய்துள்ளனர். இப்போது நாடு கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்து ...
டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது!

டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது தலைநகரான டெல்லியில் 70 இடங்களை கொண்டுள்ள டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இன்று மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, பாரதீய ஜனதா மற்றும் காங்கிரஸ் என மும்முனை போட்டி நிலவினாலும், உண்மையான போட்டி ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கும், பா.ஜனதாவுக்கும் இடையேதான் நிலவுகிறது. ஆட்சியை தக்க வைப்பதற்காக ஆம் ஆத்மியும், ஆட்சியை பிடிப்பதற்காக பாரதீய ஜனதாவும் கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பில் மீண்டும் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சியை பிடிக்கும் என கூறப்பட்டது. டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவாகிற ஓட்டுகள், 11-ந்தேதி எண்ணப்படுகின்றன. அன்று மதியமே டெல்லியில் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார் என்பது தெரிந்த...
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமீத்ஷாவுடன் கிரண்பேடி திடீர் சந்திப்பு… புதுவை காங்கிரஸ் அரசு கலைப்பா..?

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமீத்ஷாவுடன் கிரண்பேடி திடீர் சந்திப்பு… புதுவை காங்கிரஸ் அரசு கலைப்பா..?

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமீத்ஷாவுடன் கிரண்பேடி திடீர் சந்திப்பு... புதுவை காங்கிரஸ் அரசு கலைப்பா..? புதுச்சேரி துணை நிலை கவர்னர் கிரண்பேடி டெல்லி சென்றுள்ளார். அங்கு அவர் பிரதமர் நரேந்திர மோடியையும், மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவையும் சந்தித்து பேசினார். புதுச்சேரியில் ஏற்கனவே முதல்வர் நாராயணசாமிக்கும் துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் அடிக்கடி அதிகார சர்ச்சை இருந்து கொண்டே வருகிறது. சமீபத்தில் ஆட்சி அதிகாரத்தில் கிரண்பேடி தேவை இல்லாமல் ஆதீக்கம் செலுத்த கூடாது என கோர்ட் உத்தவிட்டது. அதே நேரம் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும் பல ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தலே அங்கு நடைபெறாமல் இருக்கிறது. இத்தனை பரபரப்பு இருக்கும் போது கிரண்பேடி திடீரென டில்லி சென்று பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் அமீத்ஷாவையும் சந்தித்து பேசியது பாண்டிச்சேரி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற...
மோடி,அமீத்ஷாவை பாதுகாக்க தேர்தல் கமிஷனில் விதிமுறைகள் காலில் மிதிபடுகிறது – காங்கிரஸ் கண்டனம்

மோடி,அமீத்ஷாவை பாதுகாக்க தேர்தல் கமிஷனில் விதிமுறைகள் காலில் மிதிபடுகிறது – காங்கிரஸ் கண்டனம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தேர்தல் கமிஷனில் எழுந்துள்ள பிரச்சினையில் காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கூறுகையில், “தேர்தல் கமிஷன் விதிகள் ஒருமித்த முடிவுக்குத்தான் முன்னுரிமை தெரிவிக்கின்றன. ஆனால் ஒருமித்த முடிவு இல்லை என்கிறபோது பெரும்பான்மை முடிவை ஏற்கச்சொல்கிறது. அரசியல் சாசன அமைப்பு என்கிற வகையில், சிறுபான்மை முடிவும் பதிவு செய்யப்பட வேண்டும். ஆனால் மோடியையும், அமித் ஷாவையும் பாதுகாக்க இது மிதிபடுகிறது” என்று குறிப்பிட்டார். மேலும், “பிரதமர் மோடியும், பா.ஜனதா தலைவர் அமித் ஷாவும் தேர்தல் நடத்தை விதிகளை அப்பட்டமாக மீறியதாக காங்கிரஸ் கட்சி புகார் அளித்தது. ஆனால் அவை குப்பைத்தொட்டியில் போடப்பட்டு விட்டன. இந்தியாவின் முக்கிய அமைப்புகளின் புனிதத்தை அழிக்கிற பணியை பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொண்டுள்ளார்” எனவு...
மலைக் குகையில் காவி உடையில் மோடி தியானம்… இணையத்தில் பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

மலைக் குகையில் காவி உடையில் மோடி தியானம்… இணையத்தில் பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மலைக் குகையில் காவி உடையில் மோடி தியானம்... இணையத்தில் பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்..! மக்களவைத் தேர்தல் 7 கட்டமாக இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கனவே ஆறு கட்ட வாக்குப்பதிப்வு நடந்து முடிந்துள்ள நிலையில் மே 21 ஆம் தேதி இறுதிகட்ட வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது. அதற்கான பிரச்சாரம் இன்றோடு முடிகிறது. இதையடுத்து பிரதமர் மோடியும் பாஜக தலைவர் அமித்ஷாவும் கூட்டாக பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். அதில் பத்திரிக்கையாளர்கள் கேட்ட எந்த கேள்விக்கும் மோடி பதில் அளிக்காமல் அமித் ஷா பக்கம் கைகாட்டினார். பெரும்பாலான கேள்விகளுக்கு அமித்ஷாவே பதில் அளித்தார். இதனால் இது மோடியின் பிரஸ்மீட்டா அல்லது அமித்ஷாவின் பிரஸ்மீட்டா என சமூகவலைதளங்களில் கேள்விகள் எழுந்துள்ளன. இதையடுத்து இன்று மோடி கேதார்நாத் குகைகளில் தியானம் செய்ய சென்றுள்ளார். இன்று பிற்பகலில் இருந்து நாளைக் காலை வரை...