திமுகவில் துரைமுருகன், ஆ.ராசாவுக்கு புதிய பதவிகள்!
திமுகவை பொறுத்தவரை கட்சித் தலைவர் பதவிதான் முதன்மையானதாக இருந்தாலும் பொதுச்செயலாளர் பதவி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும்.
கட்சித் தலைவருக்கு அடுத்த நிலையில் அதிகாரம் கொண்ட பதவியாகும்.
1977-ம் ஆண்டில் இருந்து பொதுச்செயலாளராக க.அன்பழகன் இருந்து வந்தார். கிட்டத்தட்ட 43 ஆண்டுகள் அசைக்க முடியாத அளவுக்கு அந்த பதவியில் நீடித்து வந்த அவர் காலமானதைத் தொடர்ந்து அவர் வகித்த பொதுச்செயலாளர் பதவி யாருக்கு கொடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதில் கட்சியில் அனுபவம் வாய்ந்த மூத்த உறுப்பினராக உள்ள கட்சியின் பொருளாளர் துரை முருகனுக்கு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்படும் என கூறப்படுகிறது. அதே நேரம் ஸ்டாலின் நிழலாக எப்போதும் அவரோடே இருந்து மிக முக்கியமான நிகழ்வுகளில் அதிரடியாக செயல்படும் ஆ.ராசாவும் பொதுச் செயலாளர் போட்டியில் இருப்பதாக தெரிகிறது.
துரைமுருகனை போட்டியின்ற...
