ஊரடங்கால் தள்ளிப்போன 6 மாத கடன் தவணை வட்டி தள்ளுபடியா? 3 நாளில் முடிவெடுக்க கோர்ட் உத்தரவு
கடன் தவணை 6 மாதம் தள்ளி வைக்கப்பட்டதற்கு வட்டிக்கு வட்டி வசூலிக்கும் வங்கிகளின் நடவடிக்கை 3 நாளில் முடிவெடுக்க அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
கொரானா ஊரடங்கால் வேலைவாய்ப்புகளை இழந்து அனைத்து தரப்பினரும் கடுமையான வருவாய் பாதிப்பில் சிக்கியுள்ளதால் வங்கிகளில் பெற்ற கடனுக்கான தவணையை செலுத்துவதற்கு 6 மாத கால அவகாசம் வழங்கி ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. ஆனால் இந்த சலுகை காலத்தில் வட்டி விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடன் தவணைக்கான சலுகை காலத்தில் வட்டியை தள்ளுபடி செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இவ்வழக்கை உச்ச நீதிமன்றம், மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக பதில் அளிக்குமாறு மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கிக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், வட்டியை தள்ளுபடி செய்வது விவேகமானதாக இருக்கா...
