அம்மாவின் ஆன்மா சாந்தி அடையனும்னா டாஸ்மாக்கை திறக்காதீங்க – அரசுக்கு கலப்பை மக்கள் இயக்கம் வேண்டுகோள்
டாஸ்மாக் திறப்பதை பரிசீலனை செய்யுங்கள் அம்மாவின் கடைசி ஆசையை நிறைவேற்றுங்கள் !
முதல்வருக்கு கலப்பை மக்கள் இயக்கம்
இயக்குனர் P.T.செல்வகுமார் வேண்டுகோள்!
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு திரைப்பட இயக்குனரும் , கலப்பை மக்கள் இயக்க தலைவருமான பிடி செல்வகுமார் வேண்டுகோள்.மே 1-ம் தேதி அன்று மதுவால் பாதிக்கப்பட்ட 150 பெண்களுக்கு அரிசி முட்டைகள் கலப்பை மக்கள் இயக்கம் வழங்கியது. அன்று 150 பெண்களும் கண்ணீரோடு டாஸ்மாக் கடைகளை இனி திறக்க வேண்டாம் என்று கோரிக்கை வைத்தோம்.மீண்டும் லட்சக்கணக்கான பெண்கள் சார்பாக பணிவான வேண்டுகோள்....
1. 45 நாட்களுக்கு பிறகு திறப்பதால் பெரும் கும்பலாக குடிக்க வருவார்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாது.இதனால் நோய் தொற்று ஏற்படும்.
2. டாஸ்மாக்கில் குடிப்பவர்கள் பெரும்பாலும் ஏழை எளிய மக்கள். வேலை இல்லாமல் பண கஷ்டத்தில் இர...

