உள்ளாடைகள் மட்டும் அணிந்து கொரானா வார்டுக்குள் வந்த நர்ஸ்!
உள்ளாடைகள் மட்டும் அணிந்து கொரானா வார்டுக்குள் வந்த நர்ஸ்!
ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவில் இருந்து 100 மைல் தூரத்தில் உள்ள நகரம் துலா. இங்கு கொரானா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அந்த மண்டலத்திற்கான அரசு மருத்துவமனை உள்ளது.
இந்த மருத்துவமனையில் ஆண்கள் சிகிச்சை பெறுவதற்கான தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 20 வயது இளம்பெண் ஒருவர் நர்ஸ் ஆக பணிபுரிந்து வருகிறார்.
நோயாளிகளிடம் இருந்து கொரானா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க டாக்டர்கள், நர்ஸ்கள் எப்போதும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (PPE) அணிந்துதான் பணிபுரிகிறார்கள். இதை சரியாக பயன்படுத்த தவறினால் கூட கொரானா தொற்றிற்கு உள்ளாக வேண்டிய நிலை ஏற்படும். PPE-யை அணிந்தால் சுமார் 6 மணி நேரத்திற்கு அதை கழற்ற முடியாத கஷ்டமும் உள்ளது. இயற்கை உபாதைகளுக்கு ரொம்பவும் சிரமப்படுவார்கள்.
பெரும்பாலான PPE-க்கள் கண்ணாடி ப...
