2-ந்தேதி முதல் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்!
தமிழகத்தில் சில மாவட்டங்களில் 2-ந்தேதி முதல் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்!
தமிழகத்தில் கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை இயல்பை விட சற்று அதிகமாக பதிவாகி இருந்தது. அதிலும் வடகிழக்கு பருவமழை வழக்கமாக நிறைவடையும் டிசம்பர் மாதத்தில் இருந்து ஜனவரி மாதம் 2-வது வாரம் வரை மழை பெய்தது. அதன் பின்னர், லேசான பனிப்பொழிவின் தாக்கம் தமிழகத்தின் சில இடங்களில் இருந்தது.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவத்தொடங்கியது. தொடர்ச்சியாக வெப்பத்தின் தாக்கம் சற்று அதிகரிக்க ஆரம்பித்தது. இந்த நிலையில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து வெயில் தன்னுடைய கோர முகத்தை காட்ட தொடங்கி இருக்கிறது. அந்தவகையில் தமிழகத்தில் சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் 100 டிகிரியை தாண்டி பதிவாகி வருகிறது. வருகிற 2-ந்தேதி முதல் மேலும் சில மாவட்டங்களில் ...

