திருப்பதியில் கொரோனா பரவல் அதிகரிப்பு- ஜெகன்மோகன் ரெட்டி தேர்தல் பிரசாரம் ரத்து!
திருப்பதியில் கொரோனா பரவல் அதிகரிப்பு- ஜெகன்மோகன் ரெட்டி தேர்தல் பிரசாரம் ரத்து!
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருப்பதி எம்.பி.யாக இருந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பல்லி துர்கா பிரசாத் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி சென்னை ஆஸ்பத்திரியில் இறந்தார்.
திருப்பதி எம்.பி. பதவிக்கான இடைத்தேர்தல் வரும் 17-ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் குருமூர்த்தி, தெலுங்கு தேசம் சார்பில் பனபாகாலட்சுமி, பா.ஜ.க., ஜனசேனா (பவன்கல்யாண்) கூட்டணி சார்பில் ரத்தினபிரபா போட்டியிடுகின்றனர். வேட்பாளர்களை ஆதரித்து அரசியல் கட்சியினர் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர். வேட்பாளர்களும் ஓட்டு சேகரித்து வருகின்றனர்.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வேட்பாளர் குருமூர்த்தியை ஆதரித்து ...
