வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 18
Shadow

Tag: ஜெகன் மோகன் ரெட்டி

முதல்வராக வெற்றி பெற்ற ஜெகன் மோகன் ரெட்டி திருப்பதியில் சாமி தரிசனம்..!

முதல்வராக வெற்றி பெற்ற ஜெகன் மோகன் ரெட்டி திருப்பதியில் சாமி தரிசனம்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஆந்திராவில் நடந்த பாராளுமன்ற,  சட்டமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. ஜெகன்மோகன் ரெட்டி நாளை ஆந்திர முதல்வராக பொறுப்பேற்கிறார். இதையொட்டி இவர் இன்று திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார். அவருடன் நகரி தொகுதி எம்.எல்.ஏ. நடிகை ரோஜா மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் சிலர் உடன் வந்தனர். முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வருகையையொட்டி வழி நெடுகிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கட்சியினர் பல முக்கிய சந்திப்புகளில் வரவேற்பு அளித்தனர்....
ஜெகன்மோகன்ரெட்டி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார் ஸ்டாலின்..!

ஜெகன்மோகன்ரெட்டி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார் ஸ்டாலின்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஆந்திர முதல்-மந்திரியாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி வரும் 30-ம் தேதி பதவியேற்க உள்ளார். ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்பு விழாவில் பங்கேற்கும்படி பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா உள்ளிட்ட பல்வேறு தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பி இருக்கிறார்கள். தமிழகத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலினையும் விழாவில் கலந்து கொள்ள அழைத்திருக்கிறார் ஜெகன் மோகன் ரெட்டி. அதே நாள் தான் மோடியும் பிரதமராக பதவி ஏற்கிறார். ஜெகன் மோகன் ரெட்டி அழைப்பை ஏற்று ஸ்டாலின் ஆந்திரா செல்கிறார்....
பிரதமர் மோடியை சந்தித்து பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுத்த  ஜெகன் மோகன் ரெட்டி..!

பிரதமர் மோடியை சந்தித்து பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுத்த ஜெகன் மோகன் ரெட்டி..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஆந்திராவில் ஆட்சியில் இருந்த சந்திரபாபு நாயுடு ஆட்சியை மண்ணை கவ்வ வைத்து இமாலய வெற்றியை பெற்றார் ஜெகன் மோகன் ரெட்டி. நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்தது. இந்த தேர்தலுடன் சேர்ந்து நடைபெற்ற ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சியில் இருந்த சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேச கட்சியின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து தனது தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அபார வெற்றி பெற வைத்துள்ளார் ஜெகன் மோகன் ரெட்டி. அக்கட்சி மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 151 இடங்களை கைப்பற்றியது. இதையடுத்து, ஆந்திர முதலமைச்சராக ஜெகன் மோகன் ரெட்டி 30ம் தேதி பதவியேற்க உள்ளார். அவரை ஆளுநர் நரசிம்மன் முறைப்படி ஆட்சி அமைக்க வரும்படி அழைப்பு விடுத்துள்ளார். இதற்கான விழா விஜயவாடாவில் வரும் 30ந்தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் ஜெகன் மோகன் ரெட்டி இன்று டெல்லிக்கு சென்று பிரதமர் மோடியை சந்...
கவர்னர் அழைப்பு… 30ம் தேதி ஆந்திர முதல்வராகிறார் ஜெகன் மோகன் ரெட்டி..!

கவர்னர் அழைப்பு… 30ம் தேதி ஆந்திர முதல்வராகிறார் ஜெகன் மோகன் ரெட்டி..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஆந்திராவில் ஆட்சியில் இருந்த சந்திரபாபு நாயுடு படு தோல்வி அடைந்ததோடு ஜெகன் மோகன் ரெட்டி இமாலய வெற்றி பெற்றதால் அவரை ஆட்சி அமைக்க வரும்படி கவர்னர் அழைப்பு விடுத்தார். ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் கடந்த மாதம் 11-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. கடந்த 23-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 151 தொகுதிகளை கைப்பற்றி ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இந்நிலையில், சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று தேர்வு செய்யப்பட்ட புதிய எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் ஆந்திரா தலைநகர் அமராவதியில் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் ஆந்திரா மாநில சட்டசபையின் ஆளும் கட்சி தலைவராக ஜெகன்மோகன் ரெட்டி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, ஜெகன்மோகன் ரெட்டி தனது ஆதரவாளர்களுடன் ஐதராபாத் சென்று, கவர்னர் நரசிம்...