ஏப்ரல் 14ம் தேதி வரை மின் கட்டணம் செலுத்தாவிட்டாலும் இணைப்பு துண்டிக்கப்படாது – அமைச்சர் தங்கமணி உறுதி
ஏப்ரல் 14ம் தேதி வரை மின் கட்டணம் செலுத்தாவிட்டாலும் இணைப்பு துண்டிக்கப்படாது - அமைச்சர் உறுதி
ஏப் 14 ம் தேதி வரை யாருக்கும் மின் துண்டிப்பு இல்லை என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.சென்னையில் மின்துறை அமைச்சர் பி. தங்கமணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
24 மணி நேரம்
கொரேனா வைரஸ் காரணமாக முதல்வரின் வேண்டுகோளை ஏற்று மக்கள் முழுமையாக வீட்டில் இருக்கும்போது, மின்சாரம் தடையில்லாமல் தரவேண்டும் என்பது முதலமைச்சரின் வேண்டுகோள். அந்த அடிப்படையில் நாங்களும் தொடர்ந்து எங்களுடைய மின்வாரிய அதிகாரிகளும்,பணியாளர்களும் 24 மணி நேரம் பணியாற்றிவருகிறார்கள்.
கிட்டதட்ட 80 சதவீத பணிக்கு வந்துகொண்டிருக்கிறார்கள்.எங்காவது பழுது ஏற்பட்டது என்றால் உடனடியாக அங்கு பணியாளர்களை அனுப்பி,பழுதை உடனடியாக நீக்கி,அந்த பகுதியில் மின் தடையில்லாமல் செய்யவேண்டும் என்பதுதான் அம்மா அரசின் எண்ணம...

