அரசியல்வாதிகளுக்கும் தமிழ் ராக்கர்ஸ் நபர்களுக்கும் தொடர்பு உண்டு – SAC பகீர் குற்றச்சாட்டு
கமலா திரையரங்கில் நடைபெற்ற குறும்பட வெளியீட்டு விழாவில் இயக்குனர்
எஸ்.ஏ.சந்திரசேகர் பேச்சு:
சினாமாவை காப்பாற்ற வேண்டியவர்கள் சினிமாவை காப்பாற்ற முயற்சிக்கவில்லை...மாறாக சினிமா தொடர்பில்லாத இந்த படத்தை இயக்கிய ரவிராஜா சினிமா காப்பாற்ற படம் எடுத்துள்ளார்...
அரசியலில் 90 சதவிகிதம் பேர் திருடர்களாக உள்ளனர்.
அரசியல் வாதிகள் சினிமாவை அழிக்க திட்டம் போட்டுள்ளனர்.
யார் ஆட்சிக்கு வந்தாலும் சினிமாவை யாரும் காப்பற்றவில்லை...
சினிமாவிலிருந்து வந்து ஆட்சிக்கு வந்துவிடுவார்கள் என்ற பயம் அரசியல் வாதிகளிடம் உள்ளது.
எம்ஜிஆருக்கு அடுத்து சினிமாவை காப்பாற்ற வேண்டுமென்கிற உணர்வு எந்த அரசியல் வாதிகளிடமும் இல்லை...
சினிமாக்கார்ர்கள் சில லட்சம் ஓட்டை அவர்கள் எதிர்பார்க்கவில்லை...
அரசியல் வாதிகள் தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையதளங்களுக்கு கூட்டாக செயல்படுகிறார்களோ என்ற சந்தேகம் உள்ளது....

