வியாழக்கிழமை, ஏப்ரல் 30
Shadow

அரசியல்வாதிகளுக்கும் தமிழ் ராக்கர்ஸ் நபர்களுக்கும் தொடர்பு உண்டு – SAC பகீர் குற்றச்சாட்டு

 

கமலா திரையரங்கில் நடைபெற்ற குறும்பட வெளியீட்டு விழாவில் இயக்குனர்
எஸ்.ஏ.சந்திரசேகர் பேச்சு:

சினாமாவை காப்பாற்ற வேண்டியவர்கள் சினிமாவை காப்பாற்ற முயற்சிக்கவில்லை…மாறாக சினிமா தொடர்பில்லாத இந்த படத்தை இயக்கிய ரவிராஜா சினிமா காப்பாற்ற படம் எடுத்துள்ளார்…

அரசியலில் 90 சதவிகிதம் பேர் திருடர்களாக உள்ளனர்.

அரசியல் வாதிகள் சினிமாவை அழிக்க திட்டம் போட்டுள்ளனர்.

யார் ஆட்சிக்கு வந்தாலும் சினிமாவை யாரும் காப்பற்றவில்லை…

சினிமாவிலிருந்து வந்து ஆட்சிக்கு வந்துவிடுவார்கள் என்ற பயம் அரசியல் வாதிகளிடம் உள்ளது.

எம்ஜிஆருக்கு அடுத்து சினிமாவை காப்பாற்ற வேண்டுமென்கிற உணர்வு எந்த அரசியல் வாதிகளிடமும் இல்லை…

சினிமாக்கார்ர்கள் சில லட்சம் ஓட்டை அவர்கள் எதிர்பார்க்கவில்லை…

அரசியல் வாதிகள் தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையதளங்களுக்கு கூட்டாக செயல்படுகிறார்களோ என்ற சந்தேகம் உள்ளது.

மக்களை திரட்டி இது குறித்து போராடினால் தான் அரசுக்கு சுரணை வரும்….

ஆளுபவர்கள்தான் சினிமாவை காப்பாற்ற வேண்டும்…

சினிமாவை காப்பாற்ற வேண்டுமென்றால் இளைஞர்களான உங்களில் ஒருவர் ஆட்சிக்கு வர வேண்டும்…நல் அரசு வரவேண்டும்…

காமராஜர் போல அரசியலில் அமைச்சர்கள் முதல் முதலமைச்சர்கள் வரை நல்லவர்கள் யாரும் இல்லை…

இந்த தேர்தலில் தமிழ்நாட்டை தவிர பணத்தை பெற்றுக்கொண்டு மீண்டும் தவறானவர்களை தேர்ரந்தெடுக்கப்படவுள்ளோம்…அனைவரும் காவி உடையை தான் அணிய போகிறோம்…

573 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன