குஜராத், அசாம்,இமாச்சல் பகுதிகளில் நிலநடுக்கம்!
குஜராத், அசாம்,இமாச்சல் பகுதிகளில் நிலநடுக்கம்!
வட இந்தியாவின் பல பகுதிகளில் இன்று அதிகாலை லேசான நில நடுக்கம் உணரப்பட்டதால் பொது மக்கள் அச்சம் அடைந்தனர்.
குஜராத்தில் ராஜ்கோட்டில் இன்று காலை 7:40 மணிக்கு 4.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி ராஜ்கோட்டிலிருந்து தென்மேற்கே 22 கி.மீ தூரத்தில் 10 கிலோமீட்டருக்கும் அதிகமான ஆழத்தில் இருந்ததாக கூறப்பட்டு உள்ளது.
இந்த மாதம் மேற்கு மாநிலத்தை தாக்கும் இரண்டாவது நிலநடுக்கம் இதுவாகும். ஜூலை 5 ம் தேதி, குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள பச்சாவ் நகரிலிருந்து 14 கி.மீ தூரத்தில் 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து மேலும் இரண்டு நிலநடுக்கங்கள் இன்று பதிவாகியுள்ளன.
ரிக்டர் அளவுகோலில் 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இன்று காலை 7:57 மணிக்கு அசாமில் க...

