விதிகளை காற்றில் பறக்கவிட்டு பப்ளிசிட்டிக்காக ஆம்புலன்ஸ் ஓட்டி சர்ச்சையில் சிக்கிக் கொண்ட நடிகை ரோஜா…!
பப்ளிசிட்டிக்காக ஆம்புலன்ஸ் ஓட்டி சர்ச்சையில் சிக்கிக் கொண்ட நடிகை ரோஜா...!
தமிழ் திரையுலகில் இருந்து ஆந்திர அரசியலுக்கு சென்று வெற்றிக் கொடி நாட்டியவர்களில் நடிகை ரோஜாவும் ஒருவர்.
தற்போது ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.
நடிகை என்பதால் அடிக்கடி ஏதாவது பப்ளிசிட்டி செய்து தன் இருப்பை காட்டிக் கொள்வது வழக்கம்.
கொரானா பரவல் ஆரம்பத்தில் கிராமத்தில் கிருமி நாசினி அடிக்கிறேன் பேர்வழின்னு ஆஸ்பத்திரி டாக்டர்கள், ஊழியர்கள் பயன்படுத்தும் கவச உடை அணிந்து நகரி கிராமத்தில் காமெடி செய்து பப்ளிசிட்டி தேடிக் கொண்டவர் ரோஜா.
இப்போது அப்படி ஒரு பப்ளிசிட்டி ஸ்டண்ட் விஷயம்தான் இப்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திராவில் அனைத்து மருத்துவ வசதிகளுடன் 108 ஆம்புலன்ஸ் சேவையை அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி சமீபத்தில் தொடங்கி உள்ளார்.
நகரி தொகுதி...
