கெட்டுப்போன ஆவின் பாலும்… SV.சேகரின் கொரானா அரசியலும்… – கோடங்கி
கெட்டுப்போன ஆவின் பாலும்... SV.சேகரின் கொரானா அரசியலும்...
- கோடங்கி
எஸ்.வி.சேகரின் வீட்டில் கெட்டுப்போன பால் பாக்கெட்டுகள்... 3மணி நேரத்தில் மாற்றப்பட்ட மர்மம்!
மயிலாப்பூர் முன்னாள் எம்.எல்.ஏ. S.V.சேகர் அடிக்கடி சமூக வலைதளங்கங்களில் எதையாவது பதிவு செய்துவிட்டு ஏகப்பட்ட எதிர் விமர்சனங்களை பெறுவது வழக்கமான ஒன்று.
அதே போல ஒரு முறை பெண் பத்திரிகையாளர்கள் பற்றி ஏடாகூடமாக பேசிவைக்க அது பெரும் சிக்கலாக தலைமறைவாக ஆனார்.
ஆனால் அந்த தலைமறைவு காலத்திலும் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கொரானா ஊரடங்கு காரணமாக உலக அளவில் மக்கள் வீடுகளில் முடங்கி இருக்கிறார்கள்.
தமிழகத்திலும் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு உள்ளது.
ஊரடங்கு காலத்தில் தனது டிவிட்டர் பக்கத்தில் பொது மக்களின் அத்தியாவசிய கோரிக்கைகளுக்கு தமிழக முதல்வர் எடப்ப...
