கிழக்கு உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் பகுதிகளில் தாக்குதல் – போர் பதற்றம் தீவிரம் அடைகிறது!
ரஷியா-உக்ரைன் நாடுகள் இடையே போர் பதற்றம் இருந்து வருகிறது. எல்லையில் ரஷியா ஒரு 1½ லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்களை குவித்து போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. உக்ரைனும் எல்லையில் போர் பயிற்சி செய்து வருகிறது.
இவ்விவகாரத்தில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் ஆதரவாக உள்ளன. உக்ரைன் மீது ரஷியா எந்த நேரத்திலும் படையெடுக்கலாம் என்று அமெரிக்கா தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால் அதனை ரஷியா மறுத்துள்ளது.
கிழக்கு உக்ரைனில் உள்ள டான்பஸ் மாகாணத்தில் ஒரு பகுதி அரசு கட்டுப்பாட்டிலும், மற்றொரு பகுதி ரஷியா ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிலும் உள்ளன. இப்பகுதியில் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகள் ரஷியா ஆதரவு கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ளது.
இங்கு சில நாட்களாக அரசு படைகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது. மேலும் கிளர்ச்சியாளர்கள் பகுதிகளில் ...


