புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: மம்தா பானர்ஜி

மேற்கு வங்காள முதல்வராக 3வது முறையாக இன்று பதவியேற்கிறார் மம்தா பானர்ஜி!

மேற்கு வங்காள முதல்வராக 3வது முறையாக இன்று பதவியேற்கிறார் மம்தா பானர்ஜி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
மேற்கு வங்காள முதல்வராக 3வது முறையாக இன்று பதவியேற்கிறார்! மேற்கு வங்காளத்தில் மொத்தமுள்ள 292 தொகுதிகளில் 213 தொகுதிகளில் வெற்றி பெற்று வலுவாக ஆட்சிக்கட்டிலில் அமர்கிறது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி. 66 வயதாகும் மம்தா, காலில் காயமடைந்த நிலையிலும் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி தேர்தல் களத்தில் சுழன்று, வரலாற்று வெற்றியை சாதித்திருக்கிறார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களால் கட்சியின் சட்டசபை தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மம்தா, தொடர்ந்து 3-வது முறையாக முதல்-மந்திரியாக இன்று பதவியேற்கிறார். கொல்கத்தாவில் உள்ள கவர்னர் மாளிகையான ராஜ்பவனில் இன்று காலை 10.45 மணிக்கு அவர் பதவிப்பிரமாணம் எடுப்பார். தற்போதைய கொரோனா சூழ்நிலையை கருத்தில்கொண்டு, பதவியேற்பு நிகழ்வு குறைந்த நபர்களுடன் எளிமையாக நடைபெறும் என ராஜ்பவன் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ம...
நாட்டில் தொழில்துறை வளர்ச்சி நின்றுவிட்டது – மம்தா பானர்ஜி!

நாட்டில் தொழில்துறை வளர்ச்சி நின்றுவிட்டது – மம்தா பானர்ஜி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
நாட்டில் தொழில்துறை வளர்ச்சி நின்றுவிட்டது - மம்தா பானர்ஜி! மொத்தம் 294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி மார்ச் 27, ஏப்ரல் 1, 6, 10, 17, 22, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. இத்தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பா.ஜ.க.வுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் இந்திய மதசார்பற்ற முன்னணி ஆகிய கட்சிகள் கூட்டணியாக இணைந்து தேர்தலை சந்திக்கின்றன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவரும், மேற்கு வங்காள முதல் மந்திரியுமான மம்தா பானர்ஜி இன...
வாக்காளர்களைக் கவர்ந்திழுக்கவும், ஓட்டுகளை அள்ளவும் பண மூட்டைகளுடன் விமானங்களிலும், ஹெலிகாப்டர்களிலும் வந்திறங்கும் பா.ஜ.க. தலைவர்கள் – மம்தா குற்றச்சாட்டு

வாக்காளர்களைக் கவர்ந்திழுக்கவும், ஓட்டுகளை அள்ளவும் பண மூட்டைகளுடன் விமானங்களிலும், ஹெலிகாப்டர்களிலும் வந்திறங்கும் பா.ஜ.க. தலைவர்கள் – மம்தா குற்றச்சாட்டு

HOME SLIDER, NEWS, politics
வாக்காளர்களைக் கவர்ந்திழுக்கவும், ஓட்டுகளை அள்ளவும் பா.ஜ.க. தலைவர்கள் பண மூட்டைகளுடன் விமானங்களிலும், ஹெலிகாப்டர்களிலும் வந்திறங்குகின்றனர் - மம்தா குற்றச்சாட்டு மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ‘ஹாட்ரிக்’ சாதனை படைக்கும் ஆர்வத்தில் உள்ளார். ஆனால் அவரிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றியே தீருவது என்று பா.ஜ.க. கங்கணம் கட்டிக்கொண்டு களம் இறங்கி உள்ளது. மம்தா கட்சியில் இருந்து எம்.எல்.ஏக்கள் முதல் மந்திரிகள் வரை பலரும் பா.ஜ.க.வுக்கு தாவுகின்றனர். இந்த தருணத்தில் பாசிம் மெதினிபூரில் நேற்று மம்தா பானர்ஜி பிரசார பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- வாக்காளர்களைக் கவர்ந்திழுப்பதற்காகவும், ஓட்டுகளை அள்ளுவதற்காகவும் பா.ஜ.க. தலைவர்கள் பண மூட்டைகளுடன் விமானங்களிலும், ஹெலிகாப்டர்களிலும் வந்திறங்குகின்ற...
அதெல்லாம் சரி… பாஜக முதல்வர் வேட்பாளர் யார்? 15 லட்சம் எங்கே? – மோடிக்கு சவால் விட்ட மேற்கு வங்க எம்பி

அதெல்லாம் சரி… பாஜக முதல்வர் வேட்பாளர் யார்? 15 லட்சம் எங்கே? – மோடிக்கு சவால் விட்ட மேற்கு வங்க எம்பி

HOME SLIDER, NEWS, politics
அதெல்லாம் சரி... பாஜக முதல்வர் வேட்பாளர் யார்? 15 லட்சம் எங்கே? - மோடிக்கு சவால் விட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மேற்கு வங்கத்தில் இரண்டு முறை தொடர்ந்து வெற்றி பெற்று முதல்வர் பதவியில் இருக்கும் மம்தா பானர்ஜியை, இந்த முறை ஆட்சி அதிகாரத்தில் இருந்து வெளியேற்றுவதற்கு பாஜக தீவிரம் காட்டி வருகிறது. பிரதமர் மோடி இன்று தனது பிரசாரத்தின்போது மம்தா பானர்ஜியை தாக்கி பேசினார். திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுவதாகவும், மம்தா பானர்ஜி வெளியேற உள்ளதாகவும் அவர் பேசினார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன், பிரதமருக்கு சவால் விட்டிருக்கிறார். டெரிக் ஓ பிரையன் கூறியதாவது:- நீங்கள் அழிவுகரமான கட்சி. நான் பிரதமரிடம் ஒரே ஒரு கேள்வியை மட்டுமே கேட்க விரும்புகிறேன். உங்கள் முதலமைச்சர் வேட்பாளர் யார்? எங்களிடம் மம்தா பானர்ஜி இருக்கிறார். உங்களால் ஏன் ...
பி.எம்.கேர்ஸ் நிதி ஏன் தணிக்கை செய்யப்படவில்லை? பா.ஜனதா ஒரு அரசியல் கட்சி அல்ல, பொய்களின் குப்பை – மம்தா பானர்ஜி

பி.எம்.கேர்ஸ் நிதி ஏன் தணிக்கை செய்யப்படவில்லை? பா.ஜனதா ஒரு அரசியல் கட்சி அல்ல, பொய்களின் குப்பை – மம்தா பானர்ஜி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பி.எம்.கேர்ஸ் நிதி ஏன் தணிக்கை செய்யப்படவில்லை? பா.ஜனதா ஒரு அரசியல் கட்சி அல்ல, பொய்களின் குப்பை - மம்தா பானர்ஜி மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:- மத்தியில் உள்ள பா.ஜனதா அரசின் விருப்பத்திற்கு ஏற்ப எனது தலைமையிலான மாநில அரசாங்கம் செயல்படாது. விசாரணை முகமைகள் மூலம் எங்களை அவர்கள் அச்சுறுத்துகிறார்கள். அதற்கெல்லாம் நாங்கள் பயப்படவில்லை. அது (பா.ஜனதா) ஒரு அரசியல் கட்சி அல்ல, பொய்களின் குப்பை. பி.எம்.கேர்ஸ் நிதி எங்கே போய் விட்டது? அதன் எதிர்காலம் என்ன என்று யாருக்காவது தெரியுமா? ஏன் அது தணிக்கை செய்யப்படவில்லை?. கொரோனாவை கட்டுப்படுத்த அவர்கள் எங்களுக்கு என்ன கொடுத்தார்கள். ஆனால் பாடம் எடுக்கிறார்கள். புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக பிரச்சினையில் பா.ஜனதாவை எந்த கட்சிகளும் ஆதரிக்கவில்லை....
நாட்டின் மிகப்பெரிய சாபம் பாஜக ஒரு அரசியல் கட்சி அல்ல, பொய்களின் குப்பை – குற்றஞ்சாட்டும் மம்தா பானர்ஜி

நாட்டின் மிகப்பெரிய சாபம் பாஜக ஒரு அரசியல் கட்சி அல்ல, பொய்களின் குப்பை – குற்றஞ்சாட்டும் மம்தா பானர்ஜி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  2021 ஏப்ரல் – மே மாதங்களில் மேற்குவங்க மாநிலத்துக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து பங்குரா பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள முதல்வர் மம்தா பானர்ஜி, பாஜகவை பொய்களின் குப்பை மற்றும் நாட்டின் மிகப்பெரிய சாபம் என்று குற்றஞ்சாட்டினார். மேலும் பேசிய அவர், திரிணமூல் எம்.எல்.ஏக்களுக்கு பாஜக லஞ்சம் கொடுக்க முயன்று அவர்களை வேட்டையாட முயற்சித்து வருகிறது. காவிக் கட்சி ஆட்சிக்கு வரும் என்று சிலர் மாயையில் இருக்கிறார்கள். பாஜக ஒரு அரசியல் கட்சி அல்ல, பொய்களின் குப்பை. தேர்தல் வரும்போதெல்லாம், அவர்கள் திரிணமூல் கட்சித் தலைவர்களை அச்சுறுத்துவதற்காக நாரடா மற்றும் சாரதா  பிரச்னைகளை கொண்டு வருகிறார்கள்.ஆனால் நான் அவர்களுக்கு மிகத் தெளிவாகச் சொல்கிறேன், நான் பாஜகவோ அல்லது அதன் ஏஜென்சிகளைப் பற்றி பயப்படமாட்டேன். அவர்களுக்கு தைரியம் இருந்தால், அவர்கள் என்னைக் க...
8ம் தேதி பிரதமர் மோடியின் அனைத்து கட்சி வீடியோ கான்பரன்ஸ் கூட்டத்தை புறக்கணிக்க மம்தா முடிவு!

8ம் தேதி பிரதமர் மோடியின் அனைத்து கட்சி வீடியோ கான்பரன்ஸ் கூட்டத்தை புறக்கணிக்க மம்தா முடிவு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
      8ம் தேதி பிரதமர் மோடியின் அனைத்து கட்சி வீடியோ கான்பரன்ஸ் கூட்டத்தை புறக்கணிக்க மம்தா முடிவு! கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி சமீபத்தில் மாநில முதல்-மந்திரிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் பிரதமர் மோடி வருகிற 8- ந் தேதி அனைத்துக் கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். பாராளுமன்றத்தில் 5 எம்.பி.க்களுக்கு மேல் உள்ள கட்சிகளின் நாடாளுமன்ற குழு தலைவர்களுடன் அன்று காலை 11 மணிக்கு காணொலி காட்சி மூலம் ஆலோசனை செய்கிறார். கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவது குறித்தும், நாடு முழுவதும் அமல் படுத்தப்பட்டு இருக்கும் ஊரடங்கு உத்தரவால் ஏற்பட்டுள்ள சூழ் நிலைகள் குறித்தும் அவர் எதிர்க்கட்சிகளுடன் ஆலோசிக்கிறார். மோடி அழைப்பு விடுத்துள்ள அனைத்து கட்சி கூட்டத்தை மம்தா பானர்ஜியின் ...
நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆக முடியாது – மம்தா பானர்ஜி

நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆக முடியாது – மம்தா பானர்ஜி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் பேசுகையில், நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆகப்போவது கிடையாது. அவர் திரும்பி வரமுடியாது என்பதில் நான் உறுதியாக உள்ளேன். அவர் வருவதற்கான கணக்கை நீங்கள் கூறுங்கள் என்று பேசியுள்ளார். மத்தியில் மாநில கட்சிகளின் கூட்டணியுடன் புதிய அரசு அமையும் என நம்பிக்கை தெரிவிக்கிறார் மம்தா பானர்ஜி....