திருப்பதியில் சாமி கும்பிட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி !
சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் 9 இடங்களில் வெற்றி பெற்றதன் மூலம் தமிழகத்தில் தனது ஆட்சியை எடப்பாடி மீண்டும் தக்க வைத்து கொண்டார்.
முன்னதாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சியை பிடிக்கும் என கருத்து கணிப்புகள் கூறிய நிலையில் ஆட்சிக்கு தேவையான இடங்களில் வென்று ஆட்சியை தக்க வைத்து கொண்டார் பழனிச்சாமி.
இதையடுத்து திருப்பதி சென்று ஏழுமலையானை வணங்கி தேர்தல் வெற்றிக்கும் ஆட்சியை தக்க வைத்ததற்கும் இறைவனுக்கு நன்றி சொல்லிவிட்டு வந்தார்....




