கொரானா பரவலை தடுக்க ஆதரவு கேட்ட ரஜினியின் வீடியோவை நீக்கிய டிவிட்டர் நிறுவனம்… விதி மீறலாம்..!
கொரானா பரவலை தடுக்க பிரதமர் மோடியின் மக்கள் சுய ஊரடங்குக்கு ஆதரவாக வெளியிட்ட வீடியோவை டிவிட்டர் நீக்கியதால் ரஜினிகாந்த் கடும் அதிர்ச்சி.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியுள்ளதாவது:
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா இரண்டாம் நிலையில் உள்ளது, அது மூன்றாம் நிலைக்கு சென்றுவிடக் கூடாது.
இத்தாலியில் 2-வது நிலையில் இருந்தபோது மக்கள் உதாசீனப்படுத்த்யதால் தான் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கொரோனா பரவுவதை தடுக்க பிரதமர் மோடி கூறியபடி நாளை வீட்டிலேயே இருக்க வேண்டும். சுய ஊரடங்கின் போது மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும்.
மக்கள் நடமாட்ட பகுதிகளில் 14 மணி நேரம் கொரோனா பரவாமல் இருந்தாலே 3வது நிலைக்கு செல்வதை தடுத்து விடலாம்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்களை பாராட்டுவோம். சுயநலமின்றி பணியாற...
