சசிகலா வாங்கிய ரூ.1,674 கோடி சொத்துகளை முடக்க வருமானவரித் துறை நடவடிக்கை தீவிரம்! –
சசிகலா வாங்கிய ரூ.1,674 கோடி சொத்துகளை முடக்க நடவடிக்கை - வருமான வரித்துறை மும்முரம்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள் என பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை கடந்த 2017-ம் ஆண்டு சோதனை மேற்கொண்டது.
இந்த சோதனையின் போது ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த ஆவணங்கள் அடிப்படையில் வருமான வரித்துறை நடத்திய விசாரணையில், 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி மத்திய அரசால் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 500, 1,000 ரூபாய் நோட்டுகள் மூலம் சென்னை, கோவை, காஞ்சீபுரம், புதுச்சேரி, மதுரை போன்ற பல்வேறு இடங்களில் சுமார் ரூ.1,674 கோடிக்கு சசிகலா ஏராளமான சொத்துகளை வாங்கி குவித்தது தெரியவந்தது.
செல்லாத ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொண்டு சசிகலாவுக்கு சொத்துகளை விற்பனை செய்தது யார்? யார்? என்பது குறித்தும் ...

