வெள்ளிக்கிழமை, ஜூன் 12
Shadow

Tag: வெள்ளம்

பிலிப்பைன்சில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 167 ஆக அதிகரிப்பு!

பிலிப்பைன்சில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 167 ஆக அதிகரிப்பு!

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், செய்திகள்
பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு மற்றும் மத்திய நகரங்களில் மேகி என பெயரிடப்பட்ட சூறாவளி தாக்கியது. இதனால், பல்வேறு நகரங்களில் பலத்த காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியது. கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டது. நகரின் பல பகுதிகளில் மின் இணைப்பு, சாலை வசதி துண்டிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, அந்நாட்டின் லெய்டி மாகாணம் பேபே நகரில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, பிலிப்பைன்சில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 28 பேர் உயிரிழந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது. மேலும், நூற்றுக்கணக்காணோர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், பிலிப்பைன்சில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரி...
நாகர்கோவிலில் கனமழையால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது!

நாகர்கோவிலில் கனமழையால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது!

HOME SLIDER, NEWS, செய்திகள்
நாகர்கோவிலில் கனமழையால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது! குமரி மாவட்டத்தில் நேற்று மதியம் 12 மணி முதல் சூறைக்காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியது. மதியம் தொடங்கிய மழை இரவு வரை கனமழையாக விட்டு விட்டு நீடித்தது. இதனால் மாவட்டத்தில் தாழ்வான பகுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. நாகர்கோவில் நகரில் பெய்த கன மழையால் மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து சாலையில் விழுந்தது. அதனை மாநகராட்சி ஊழியர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர். கனமழையால் மாநகரின் முக்கிய சாலைகள் எங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் டி.வி.டி. காலனி, செந்தூரா நகர், ரெயில்வே குடியிருப்பு, கம்பளம், ஒழுகினசேரி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளில் மழைநீர் புகுந்தது. சூறைக்காற்றுடன் வீசிய மழையால், மாநகரின் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. குறிப்பாக நேசமணி நகர் ...