டிரம்ப் பேசிக்கொண்டிருந்த போது வெள்ளை மாளிகை வெளியே மர்ம நபர் துப்பாக்கிச்சூடு!
டிரம்பின் செய்தியாளர் சந்திப்பின்போது வெள்ளை மாளிகைக்கு அருகே மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்ப் நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்துக் கொண்டிருந்தார். அப்போது வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.
துப்பாக்கியால் சுடும் சத்தத்தைக் கேட்ட ட்ரம்ப்பின் பாதுகாவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள், ட்ரம்ப்பைச் செய்தியாளர்கள் அறையில் இருந்து பாதுகாப்பாக வெளியே அழைத்துச் சென்றனர். செய்தியாளர்களையும் மற்றொரு அறையில் அடைத்து வைத்தனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சிறிது நேரத்தில் மீண்டும் செய்தியாளர்கள் அறைக்கு வந்த ட்ரம்ப்'' வெளியே துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. ஆனால் ஆபத்து ஏதும் இல்லை. உளவுத்துறை அதிகாரிகள் சிறப்பாகச் செயல் பட்டுள்ளனர்'' என்று சொல்லி விட்ட...
