உ.பி.யில் தொழிலாளர்கள் மீது கிருமி நாசினி திரவம் தெளிக்கப்பட்டது மனிதாபிமானமற்ற செயல்!
உபி.யில் தொழிலாளர்கள் மீது கிருமி நாசினி திரவம் தெளிக்கப்பட்டது மனிதாபிமானமற்ற செயல்!
உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரானா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டுள்ளன.
கொரானா வைரஸ் பாதிப்பை தடுக்க நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டு உள்ளது.டெல்லி, மும்பை உள்பட பல்வேறு நகரங்களில் வேலை பார்த்து வந்த லட்சகணக்கான மக்கள் தங்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்பி வருகின்றனர்.
உத்தரபிரதேசம், பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் லட்சகணக்கில் உள்ளனர். அவர்கள் கூட்டம் கூட்டமாக சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். இதனால் சமூக தொற்று ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது.
உத்தரபிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில் இவ்வாறு சொந்த ஊர் திரும்பிய ஆயிரகணக்கானவர் மீது கொரானா அச்சத்தால் ...