பாலியல் வன்கொடுமை செய்தவருடன் சேர்ந்து வாழ்வதாக கூறினாலும் போக்சோ குற்றங்களில் சமரசத்துக்கு இடமில்லை – உயர்நீதிமன்றம்
பாலியல் வன்கொடுமை செய்தவருடன் சேர்ந்து வாழ்வதாக கூறினாலும் போக்சோ குற்றங்களில் சமரசத்துக்கு இடமில்லை - உயர்நீதிமன்றம்
பாலியல் வன்கொடுமை செய்தவருடன் சேர்ந்து வாழ்வதாக கூறினாலும் சமரசத்துக்கு இடமில்லை என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பில்பருத்தி பகுதியை சேர்ந்தவர் மருதுபாண்டி (வயது 27). இவர் கடந்த 2014-ம் ஆண்டு பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்தார். இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார், மருதுபாண்டியை கைது செய்தனர். தொடர்ந்து, இந்த வழக்கு தர்மபுரி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
வழக்கில் மருதுபாண்டி மீதான குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டதால், மருதுபாண்டிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட மகளிர் நீதிபதி (கூடுதல் பொறுப்பு) ஜீவானந்தம் க...