சூடு பிடித்த கேரள தங்க கடத்தல் விவகாரம்… இதுவரை 180 கிலோ தங்கம் கடத்தியது அம்பலம்!
*கேரள தங்கக் கடத்தல் வழக்கில் என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை; இதுவரை 180 கிலோ தங்கம் கடத்தப்பட்டது அம்பலம்: முதல்வர் பினராயி விஜயன் ராஜினாமா செய்ய ரமேஷ் சென்னிதாலா வலியுறுத்தல்*
கேரள தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணையில், ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரைப் பயன்படுத்தி இதுவரை 180 கிலோ தங்கம் கடத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
திருவனந்தபுரத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு கடந்த 5-ம் தேதி சில சரக்குப் பெட்டிகள் வந்தன. கேரளாவில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக முகவரிக்கு வந்திருந்த இந்த சரக்குப் பெட்டிகளை, சந்தேகத்தின் பேரில் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது, அதில் ரூ.15 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்கம் இருப்பது கண்டறியப்பட்டது. இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பாக கேரள அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிந்து வந்த ஸ்வப்னா ச...