கண்களை கட்டிக் கொண்டு நூதன முறையில் வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர்!
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கண்களை கட்டிக் கொண்டு நூதன முறையில் வாக்கு சேகரித்து வாக்காளர்களை கவர்ந்துள்ளார்.
புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 22வது வார்டில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கண்களைக் கட்டிக்கொண்டு நூதன முறையில் வாக்கு சேகரித்தார்.
கண்களை கட்டியதால் தள்ளாடியபடி சென்ற வேட்பாளரை கட்சி நிர்வாகிகள் கைத்தாங்கலாக அழைத்துச் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
இந்த கண் கட்டு எதற்காகவாம் என்றால், “ வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அடிப்படை பிரச்சனைகளை தீர்த்த பிறகுதான் வாக்காளர்களின் முகத்தை பார்ப்பாராம்” இந்த பாஜக தொழில் பிரிவு மாவட்ட தலைவர் சீனிவாசன்.
எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க...!...